Wednesday 26 March 2014

நன்றி மறந்த 'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன்...!





ஒரு காலத்தில் கடவுளாய்த் தெரிந்தவர் இன்று  ஏளனம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சோகச்சித்திரம் இது.

குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குறித்த ஒரு செய்திப்பதிவு மூன்று வாரங்களுக்கு முன்பு எழுதப்ப‌ட்டு வரதராஜன் பார்வைக்குப் போயுள்ளது. அதைப் படித்த வரதராஜன் (குமுதம் குழும இதழ்களைத் தனது கட்டுப்பாட்டில் இப்பொழுது வைத்திருப்பவர். ) இதை யார் எழுதியது ? என்று கேட்கவும் ஆசிரியர் கோசல்ராம், ரிப்போர்ட்டர் முருகேசன் எழுதியது என்று சொல்லியிருக்கிறார்.

உடனே வரதராஜன்,இதுக்குப் பதிலா ஆபிஸ் பையனை வச்சு எழுதியிருந்தா சிறப்பா வந்திருந்திருக்கும் என்று ஏளனம் செய்துள்ளார்.அதனை கோசல்ராம் அப்படியே முருகேசனை அழைத்து,உங்களை வைச்சு எழுதுனதுக்குப் பதிலா ஆபிஸ் பையனை வச்சு எழுதியிருக்கலாம் என்று சொன்ன‌வுடன் இரா.முருகேசன்,அப்படியே செய்யுங்க சார்...நான் எதுக்கு இங்க என்று சொல்லியபடி தனது வேலையை விட்டு விலகி விட்டார்.

வேலையை விட்டுச் செல்லும் பொழுது, "அன்று கடவுளாகத் தெரிந்த நான் இன்று மதிப்பில்லாமல் போய் விட்டேன்.நன்றி கெட்ட உலகம்" என்று அலுவலகத்தில் அனைவரிடமும் சொல்லிச் சென்றுள்ளார்..

இரா.முருகேசன் அன்று யாருக்கு கடவுளாய்த் தெரிந்தார் என்று தெரிவதற்கு முன் அவரைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இரா.முருகேசன் இதற்கு முன் தினமலர்,சென்னை எழும்பூர் நிர்வாக அலுவலகத்தில் ரிப்போர்ட்டராய்ப் பணிபுரிந்தவர்.இவருக்கு திமுக மேல்மட்டத் தொடர்புகள் அனைத்தும் உண்டு.கனிமொழியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்.

தினமலரில் பணியாற்றிய முருகேசன் அதன்பின் குமுதம் ரிப்போர்ட்டரில் பணிக்குச் சேர்கிறார். இங்கு தி.மு.க. பீட் பார்க்கிறார்.

அந்த சமயத்தில் குமுதம் ஒரிஜினல் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கும், பார்த்தசாரதி மகன் வரதராஜனுக்கும் குமுதம் குழுமச் சொத்து தொடர்பிலான பிரச்சனை முக்கிய கட்டத்தில் இருக்கிறது.கருணாநிதி முதல்வராய் இருந்த சமயம் அது. கருணாநிதி ஜவஹர் பழனியப்பனுக்கு ஆதரவாய் இருக்கிறார்.

குமுதம் தொடர்பான பிரச்சனையில் வரதராஜனுடன் பேச்சுவார்த்தையில், ஹிந்து ராம் உள்ளிட்டோர் ஈடுபட்டும் உரிய சமரச தீர்வு எட்டப்ப‌டவில்லை. வரதராஜன் அநியாயமாகப் பிடிவாதம் பிடிக்கிறார். அதனால் ஜவஹர் பழனியப்பன் புகாரின் பேரில் வரதராஜனைக் காவல்துறை கைது செய்கிறது.கைது செய்த பின்பு வரதராஜனை அழைத்துச் சென்ற காவல்துறை அவர் எங்கு வைக்கப்ப‌ட்டிருக்கிறார் என்று சொல்லாமல் அலைக்கழிக்கிறது. அப்பொழுதைய முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்திய பிரச்சனை என்பதால் யாரும் இதில் தலையிட யோசிக்கின்றனர்.

வரதராஜனுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் அதிகார மட்டத்துடன் தொடர்பு கொள்ள‌வும், அவர்களிடம் காரியம் சாதிக்க‌வும் என்றே ஒரு சிலருக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும்.

வரதாரஜனின் குமுதம் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் அப்படி இரண்டு பேர் இருந்தனர்.அதில் ஒருவர் கோசல்ராம் அவரால் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.இன்னொருவரான ஜான் வில்கின்ஸ் பிரச்சனை உருவான பொழுது எட்டியே பார்க்க‌வில்லை.ஜானுக்கு, வரதராஜன் வட்டாரத்தில் இருந்து இது குறித்து  யாரும் போன் செய்தால்,அவர் என் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிற‌தா என்று தான் கேட்டாரே தவிர,வரதராஜனைக் காப்பாற்ற முன் வரவில்லை.வெளியே தலைகாட்டினால் நம்மை ஏதாவது வழக்கில் காவல்துறை கைது செய்துவிடுமோ என்று பயந்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இவர் தான் பதிவில் நாம் கூறியுள்ள இரா.முருகேசன்


ப்பொழுது தான் செய்தியாளர் இரா.முருகேசன் அவராகவே முன்வந்து தன் 'வேலை'யைத் தொடங்குகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் என்று சொல்லப்படும் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா அவரது தொடர்பில் இருக்கிறார்.அவரை அணுகி அவர் மூலம் மு.க்.ஸ்டாலினை தொடர்பு கொள்கிறார்கள். முதலில் யோசித்த ஸ்டாலின் ஒருவழியாய் இந்த வழக்கில் தலையிடுகிறார்.இன்னொரு புறம் குமுதம் ஜவஹர் பழனியப்பனும் கைது நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்ள‌லாம் என்று முட்டாள் தனமாய் பின் வாங்குகிறார். அதனால் கருணாநிதி ஒருவழியாய் சமாதானம் ஆகிறார். அதன் பின் வரதராஜன் அலைக்கழிப்பில் இருந்து வெளிக்கொணரப்ப‌டுகிறார்.

வரதராஜனின் கைது படலம் சிறை செல்லாமல் முடிவுக்கு வருகிற‌து.இந்த வழக்கிலிருந்து வரதராஜன் தப்பி விட்டார்.(அன்று ஜவஹர் பழனியப்பன் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று அவர் தான் குமுதம் முதலாளியாய் இருந்திருப்பார்.பிரச்சனை இழுத்துக் கொண்டு இருந்திருக்காது.)

இதில் பெட்டிச் செய்தி...

குமுதத்தில் அப்பொழுது ஊழியர்கள் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கு ஆதரவாக அதிக அளவிலும், குமுதம் ரிப்போர்ட்டரில் வரதராஜனுக்கு ஆதரவாயும் இருந்தனர்.

வரதராஜன்  கைது செய்யப்ப‌ட்ட பொழுது குமுதம் குழுமத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் வரதராஜனுக்குத் தங்கள் தார்மீக ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு மாநகரக் காவல்துறை அலுவலகம் சென்றனர்.அதே சமயம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,கைது செய்யபப்ட்ட  வரதராஜனைச் சந்திக்க யார் யார் செல்கிறார்கள் என்பதை அறிவதற்காய் புகைப்படக் காரர் திரு.மத்தியாஸ் என்பவரை அனுப்புகிறார்.

வரதராஜனை அங்கு கண்டதும் அவருக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.அதில் உற்சாகமான ஒரு பத்திரிகையாளர் கம் இலக்கியவாதி லைட்டாக ஒரு டான்ஸ் போட்டதோடு மட்டுமல்லாமல்,விசிலடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். (சமுத்திரம் என்று பொருள்படும் புனைப்பெயரை தனக்குச் சூட்டியுள்ள‌வர் தான் அவர்.இலக்கிய உலகிலும் அவர் அறியப்படுபவர் தான்.)

இந்த சமயத்தில் ஜவஹர் பழனியப்பன் அனுப்பிய புகைப்படக்காரர் .மத்தியாஸ் அங்கு வந்து சேர்கிறார்.அவர் வந்தவுடன் வரதராஜனுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் இடத்தைக் காலி செய்து ஓட்டம் பிடித்தவ‌ர்கள்,குமுதம் அலுவலகம் சென்று தான் நின்றார்கள். 






தன்பின் வரதராஜன் காவல்துறை பிடியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.சிறைவாசம் தவிர்க்கப்படுகிறது.வெளியில் வந்தவுடன் தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்த இரா.முருகேசனை அழைத்து கடவுள் மாதிரி எனக்காக வந்தீர்கள் என்று கையைப்பிடித்து நன்றி சொல்கிறார். 

அதன்பின் தான் மு.க.ஸ்டாலினின் மனைவி எழுதும் தொடர் குமுதம் குழும இதழ்களில் வெளிவருகிறது.இன்று வரை கருணாநிதியை வன்மத்துடன் அணுகும் வரதராஜன் கட்டுப்பாட்டில் இருக்கும் குமுதம் குழும‌ பத்திரிகைகள்,ஸ்டாலினை மென்மையாக அணுகும் காரணம் இதுதான்.(இது இன்னும் எவ்வளவு காலத்துக்கோ...)

இது தான் முருகேசனின் புலம்பலுக்கு காரணம்.

யாருக்கு உதவி செய்கிறோம்,என்ன நோக்கத்திற்கு உதவி செய்கிறோம் என்பதை வைத்துத் தானே அதன் தராதரம் தீர்மானிக்கப்படும்.வரதராஜன் போன்றவர்களின் நியாயமற்ற காரியங்களுக்கு உதவி செய்துவிட்டு இப்பொழுது புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிற‌து..?

மேலும் வரதராஜனிடம் நன்றியை எதிர்பார்ப்பது மிகவும் மடமை அல்லவா..?

Sunday 23 March 2014

மோடியின் இதயத் துடிப்பு ஜூனியர் விகடன்...!



ரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக் கூட்டணிக்குத் தரகு வேலை பார்ப்பதில் முக்கியப் பங்காற்றிய தரகு மணியனே,கட்சிகளின் சித்து விளையாட்டாலும் அவர் எதிர்பார்த்த வகையிலான அங்கீகாரம் கிடைக்காததாலும்  கொஞ்சம் மன உளைச்சல் அடைந்து,தன்னை மறந்து சில உண்மைகளை இப்பொழுது பேசத் தொடங்கியிருக்கிறார்.

ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றிய ஊடகத் தரகரான ஜூனியர் விகடன் முன்னிலும் வீரியமாக களத்தில் இறங்கித் தனது கோயபல்ஸ் தனத்தை தொடர்ந்து காட்டி வருகிறது.இன்று வெளியான‌ ( 26 மார்ச் 2014 இதழில் ) கழுகார் சொல்லியதில் இருந்து சில பகுதிகள்.




//பி.ஜே.பி. கூட்டணித் தலைவர்கள் கூட்டம் 20-ம் தேதி மதியம் சென்னையில் நடந்தது. கடைசி வரைக்கும் டென்ஷன் இருந்தது. அந்தக் காட்சிகளைத்தான் கழுகார் விவரிக்க ஆரம்பித்தார்.

''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. அதற்கான சூழ்நிலையை அடுத்துச் சொல்கிறேன்.'''//







தே.மு.தி.க.வுக்கு ஒருவாரம் 12 தொகுதிகள் என்பது மறுவாரம் 11 தொகுதிகள் என்பது,இன்னொரு வாரம் 14 தொகுதிகள் என்பது,இன்னொரு வாரம் கூட்டணி இல்லை என்பது.கடைசியில் ஏதாவது ஒன்று வழக்கம் போல் நடந்து விட்டால் நாங்கள் அன்றே சொன்னது நடந்து விட்டது பாருங்கள் என்று கூச்ச நாச்சமில்லாமல் குதிப்பது.

ஜூ.வி.கோயபல்ஸ் டீமே மறந்தும் உண்மை பேசக் கூடாது என்று சபதமா..!

*




//ஏழு சீட்டுக்கு எப்படி காம்ப்ரமைஸ் ஆனது ம.தி.மு.க.?''//


''பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்றுதான் ஆரம்பத்தில் முடிவானது. ஈஸ்வரன், பச்சமுத்து, புதுவை ரங்கசாமி ஆகிய மூன்று பேர் கூட்டணிக்குள் வருவதால், ம.தி.மு.க-விடம் இருக்கும் ஒரு சீட்டை எடுத்தாக வேண்டிய நெருக்கடி பி.ஜே.பி-க்கு வந்தது. அவரிடம் நேரடியாகச் சொன்னால் என்ன ஆகுமோ என்று திணறினார்கள். ராம் ஜெத்மலானி சொன்னால் வைகோ கேட்பார் என்று நினைத்தார்கள். ராம் ஜெத்மலானிக்கு யார் சொல்வது? நரேந்திர மோடி சொன்னால்தான் ராம் ஜெத்மலானி கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். மோடி, ராம் ஜெத்மலானியிடம் சொல்ல, அவர் வைகோவிடம் சொல்ல, அவர் ஒப்புக்கொண்டார். '//

கழுகார் சொன்னது இது.
*

ங்களுக்கு ஏழு சீட்டு கிடையாது,ஐந்து தான் என்று பொன்னார் சொன்னாலே,நெளிந்து வளைந்து சிரித்து,உருகிச் சம்மதிக்கும் நிலையில் வைகோ இருக்க, தனது ஆதர்ச நாயகனுக்கு ராம் ஜெத்மாலனி,நரேந்திர மோடி என்று ஜாக்கி வைத்து  பில்ட் அப் செய்கிறது ஜூ.வி.

ஆனால் இன்னொரு தரகர் ஜூ.வி.யின் ஜாக்கியை எட்டி உதைத்து விட்டார்.




கேள்வி: தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் அப்படி என்னதான் சிக்கல் ஏற்பட்டது?

கூட்டணியின் நோக்கம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக, வைகோவிடம் போராடி 7 சீட்டுக்கு சம்மதிக்க வைத்தேன். 


தரகு மணியன் (நக்கீரன் 25-03-2014 தேதியிட்ட இதழ்) இந்த இதழ் பேட்டியில்.


எது உண்மை..?

இதைப்படித்த பின் தரகர்கள் என்றாலே பொய்யும் புரட்டும் தானே என்று நீங்கள் முடிவுக்கு வருவது தரகர்கள் அனைவரையும் இழிவு படுத்துவது ஆகும்.

தான் உண்மையைத் தவிர எது சொன்னாலும்,நம்புவதற்கு வாசகர்கள் என்னும் மடையர்கள் இருக்கிறார்கள் என்று கட்டுக்கதையை நல்ல திரைக்கதையாக வடிவமைத்து வெளியிடுகிறது.கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள்.இங்கு அதற்கும் வாய்ப்பு இல்லை. 


பொய்களை உற்பத்தி செய்யும் கூடத்தின் ஒரு பகுதி....


ந்தப்பொய்யை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஜூ.வி.வெளியிட்ட மிகப்பெரிய இட்டுக்கட்டிய மோசடிச் செய்தியைப் பார்ப்போம்.

இது செப்டம்பர் 18,2013 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளியான கவர் ஸ்டோரி.





அதாவது நாடாளுமன்ற‌த் தேர்தல் குறித்த பேச்சுக்கள் தமிழ்நாட்டில் ஏற்படுவதற்கு முன்பேயே நரேந்திர மோடி தமிழ்நாட்டில் நிற்கப்போகிறார் என்றும், இதன் மூலம் தமிழ்நாட்டுத் தேர்தலில் பா.ஜ.க.முக்கியப் பங்காற்றப் போகிறது என்பது போலவும் தமிழ்நாட்டில் 'நடுநிலை' வேடமிட்ட இதழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை.

ந‌ரேந்திர மோடி போட்டியிடுவதாக ஜூ.வி.சொல்லிய மூன்று தொகுதிகளில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. வுக்கு கோவை மட்டும் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.மீதம் இரண்டும் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்ப‌ட்டுள்ளது.  மோடி போட்டியிட மேற்கண்ட தொகுதிகள் வேண்டும் என்று தே.மு.தி.க.விடம் கோடிட்டுக் காட்டியிருந்தால் கூட மண்டியிட்டுக் கண்டிப்பாய்க் கொடுத்திருக்கும்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அப்படி பா.ஜ.க. கேட்டதாகவோ,தே.மு.தி.க.,மறுத்ததாகவோவும் விஜயபாரதம் இதழிலோ,ஜூனியர் விகடன் இதழிலோ இந்த 6 மாதத்தில் துணுக்குச் செய்தி கூட இல்லை.சரி .அது தான் போகட்டும்.பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்ப‌ட்ட கோவை நாடாளுமன்ற‌த் தொகுதியிலாவது மோடி போட்டியிடுகிறாரா என்றால் அங்கு தமிழ்நாடு  பா.ஜ.க.முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

கோவை தொண்டர்களோ,செல்வகுமார் என்பவரைத் தான் வேட்பாளராய் நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்களே தவிர,மோடி போட்டியிட வேண்டும் என்று ஒரு காக்கா கூட அங்கு கரையவில்லை.

ஆக தமிழ்நாட்டு பா.ஜ.க.தலைமையும்,கட்சித் தொண்டர்களும் மோடி போட்டியிடுவது குறித்து எந்த எண்ணமும் விருப்பமும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஜூ.வி.தான் தனது ஊடக வலிமையைப் பயன்படுத்தி திட்டமிட்டு இட்டுக்கட்டி பொய்ச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தேர்தலுக்கு 7 மாதத்திற்கு முன்பேயே தமிழ்நாட்டில் மோடிக்கு காவடி எடுப்பது என்றும் பாரதிய ஜ்னதாவின் தாமரையை இங்கு மலரச்செய்ய எழுத்து விபச்சாரம் செய்வது என்றும் ஜூனியர் விகடன் நிர்வாகம் முடிவு செய்து விட்டது.அதன் விளைவு தான் இந்தச் செய்தி.இந்தச் செய்தியின் மூலம் தமிழ்நாட்டு வாசகர்களிடையே மோடி போட்டியிடப் போகிறார் என்பது போன்ற ஒரு பேசுபொருளையும் உருவாக்கி நாடாளுமன்ரத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் கரசேவையைத் தான் விகடன் செய்துள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் சீண்டப்படாத நிலையில் இருக்கும் பாரதிய ஜனதாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்ப‌ட்ட‌ முதல் முயற்சி. பாரதிய ஜனதா அமைக்க இருக்கும் கூட்டணியில்,பிற கட்சிகள் சேரும் எண்ணத்தை உருவாக்க‌ ஊன்றப்பட்ட முதல் வித்து.இந்தச் செய்தி விஜயபாரதம் இதழில் கூட இதுவரை வரவில்லை.

ஜூனியர் விகடன் வெளியிட்ட இது போன்ற செய்தியானது, கட்சிகளை பா.ஜ.க.கூட்டணிக்கு கொண்டு வர களத்தில் இறங்கிப் பணியாற்றும் தரகு மணியன் உள்ளிட்டவர்களுக்குப் பேருதவியாய் இருந்திருக்கும்.

ஜூ.வி.ஊன்றிய அந்த வித்து ஒரு மோசடி என்பது இன்று நிருபிக்கப்ப‌ட்டுள்ள‌து.

புலனாய்வு இதழ்கள் என்று தமிழ்நாட்டில் பார்த்தோமானால் நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை இருக்கின்றன.இதில் நக்கீரனுக்கு திமுக முத்திரை,குமுதம் ரிப்போர்ட்டருக்கு அதிமுக-பாரதிய ஜனதா முத்திரை உள்ள‌து.அதனால் இவை வெளியிட்ட செய்திகள் எப்பொழுதும் நம்பகத் தன்மையுடன் பொதுத்தளத்தில் உள்ள வாசகர்களால் அணுகப்ப‌டுவதில்லை.மேற்கண்ட இதழ்களும் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காய் இதுகுறித்து கவலைப்ப‌டுவதுமில்லை.

இவர்களிடமிருந்து சற்றே மாறுபட்டு நடுநிலை என்ற பிம்பத்துடன் இதுவரை வெளிவந்த ஜூனியர் விகடன் தான் இப்பொழுது மிகவும் மோசடியாய்க் காட்சி அளிக்கிறது.

நடுநிலை என்று அது கட்டி எழுப்பிய பிம்பத்தை வைத்து விற்பனையிலும் முதல் இடம் பிடித்திருந்தது. இப்பொழுது நடுநிலைமை பிம்பம் மற்றும் விற்பனை பலம் ஆகியவற்றை மூலதனமாய் வைத்து தனக்கு வேண்டிய பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு எழுத்து விபச்சாரம் செய்கிறது.

இதற்கு எதற்கு தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று வைத்து வாசகனை ஏமாற்றிப் பிழைக்க வேண்டும்..?

*
தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவது குறித்த செய்தியே அப்பட்டமானது இட்டுக்கட்டப்பட்டது என்ற நிலையில்,குஜராத்திற்கு சென்று ஜூ.விகடன் விசாரித்து எழுதுவதாகச் சொல்லும் செய்தியில் என்ன அடிப்படை நேர்மை இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....



ஜூனியர் விகடன்-மோடியின் இதயத் துடிப்பு

Friday 21 March 2014

அடியாள் @ எடிட்டரின் தொழிலாள‌ர் விரோதப் போக்கு...!





தொழிலாளர் விரோதப்போக்கில்,அவர்களின் உரிமைகளை நசுக்குவதில்,சுரண்டுவதில் அனைத்து நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.ஊருக்கும் உலகுக்கும் அறம் போதிக்கும் ஊடக நிறுவனங்கள் இதில் 'முன்மாதிரியாய்த்' திகழ்பவை.

சமீபத்தில் 'சன்' குழுமத்தின் தினகரன் நாளிதழ் நிர்வாகம் , தனது ஊழியர் ஒருவரிடம் நடந்து கொண்ட அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை இங்கு பதிவு செய்கிறோம்.

திரு.கோவிந்தராஜ்.இவர் சென்னை தினகரன் தலைமை அலுவலகத்தில் செய்திப்பிரிவில் மூத்த உதவி ஆசிரியராய் பணிபுரிபவர். (புரிந்தவர்). இதற்கு முன் வேலூர் தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியராய் பணிபுரிந்தவர்.அங்கு உள்ள மேனேஜர் தனது கொள்ளைச்செயலுக்கு துணை புரியும் வண்ணம்  இணக்கமான ஒரு செய்தி ஆசிரியர் வேண்டும் என்று, சென்னை நிர்வாகத்தில் வற்புறுத்தியதால் ஏ.டி எம்.  களவாணிப்பயல் ஒருவரை செய்தி ஆசிரியராய் நியமித்து விட்டு நிர்வாகம், இவரைச் சென்னை அலுவலக செய்திப்பிரிவுக்கு மாற்றியது .

செய்யும் பணியில் நேர்மையும், திறமையும் மிக்கவர் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஒரு செய்திப்பதிவை ஒழுங்காய் எழுதத் தெரியாதவனும்,கை நீட்டிக் காசு வாங்குபவனும் யாருக்கும் கூழைக்கும்பிடு போடுவார்கள்.ஆனால் பணியில் நேர்மையாகவும் திறமையாகவும் இருப்பவர்கள் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் தானே இருப்பார்கள். அதே நேரத்தில்  நிர்வாகத்தின் அடியாள்  என்பது மட்டும் தகுதியாய் இருப்பதனால் ஆசிரியராய் நியமிக்கப்பட்ட‌வ‌ர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.

முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம்வரைக்கும் மாங்குமாங்குனு மண்டையைக் குடைஞ்சுகிட்டு, எந்த செய்தி முதல்ல வரணும் எது பின்னால வரணும், எந்தெந்த செய்தியெல்லாம் வரக்கூடாது, எந்தெந்த செய்தியெல்லாம் வரணும், எந்த செய்தியையாவது யாராவது அன்னைக்குப் பொழுது சரியா கொடுக்கலைனா சம்பந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு அதைச் சரிசெய்யுறது-   வினாடி நேரம்கூட யோசிக்க அவகாசம் இல்லாமல் சில மணி நேரங்களில் படபடன்னு மண்டையைக் குடைஞ்சுகிட்டு, நாளேட்டின் ஆசிரியர் பணியைச் செய்வது, அதை தகுதியும் திறனும்கொண்ட பத்திரிகையாளர்களுக்குதான் தெரியும். அதன் அவஸ்தையும் அந்த உழைப்பினால் வரும் மகிழ்ச்சியும் புரியும். 

உலகம் முழுவதும் இருக்கும் இந்த நடைமுறையில்.. தமிழகத்தில் மட்டும், கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு பத்திரிகை தொடங்கும் வல்லமை கொண்ட எவனும் அல்லது அவன் நியமிக்கும் போக்கிரி, குண்டன், சமூகவிரோதிகூட பத்திரிகை ஆசிரியராக உலா வரமுடியும்; அதுவும் அரசாங்கம் வழங்கும் செய்தித்துறை அங்கீகாரத்தை இறக்குமதி வகைக் கார்களில் ஜம்பமாக ஒட்டிக்கொண்டு எனும் கேவலம் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இதில் ஒன்று தான் தினகரன் நாளிதழ்.

து என்னவோ தெரியவில்லை, ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கோவிந்தராஜின் பக்கத்து மாவட்டம் என்றாலும், இவரை ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் பிடிக்கவில்லை.தனக்கான சந்தர்ப்பம் எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

திரு.கோவிந்தராஜ்,கடந்த ஒரு மாதம் முன்பு  தனது கண்ணில் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சைக்காய் மூன்று வார மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார். அதன்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கூடுதலாய் ஒரு வாரம் மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார்.அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது.ஒவ்வொரு ஊழியரும் பணியாற்றிய ஐந்து ஆண்டுகளில் 60 நாட்கள் மருத்துவ விடுமுறை தொகுப்பு எடுக்கலாம். அதற்கு மேல் மருத்துவ விடுமுறை எடுத்தால் ஊதியம் கிடைக்காது. இது தான் சட்டம்.

சிகிச்சையும் ஓய்வும் முடிந்து மீண்டும் பணிக்குச் சேர வந்த பொழுது அங்குள்ள ஹெச்.ஆர்.சாந்தி நீங்கள் பணியில் சேர்வ‌தற்கு முன் எடிட்டர் ஆர்.எம்.ஆர்.அவர்களை ஒருமுறை பார்த்து விடுங்கள் என்றிருக்கிறார். இவரும் அதனை ஏற்றுக்கொண்டு ஆர்.எம்.ஆரைச் சந்திக்க பல நாள் பலமுறை முயன்றிருக்கிறார்.அதற்காய் காத்திருந்திருக்கிறார்.ஆனாலும் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறார்.

சரி இனி எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கத் தேவை இல்லை என்று முடிவு செய்து கொண்டு பாரிமுனை சென்று வழக்குரைஞரைச் சந்தித்து தினகரன் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுபியுள்ளார்.விரைவில் வழக்கு நடைபெறும் எனத் தெரிகிற‌து.ஒரு தொழிலாளி கண் சிகிச்சைக்கு விடுமுறை எடுப்பதற்குக் கூட உரிமை இல்லையா..? அப்படி விடுமுறை எடுத்தவரை  அலைக்கழித்து எந்தப்பதிலும் சொல்லாமல்,பணியில் சேரும் வாய்ப்பைத் தடுத்து திட்டமிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.

நிர்வாகத்தின் அடாவடியை எதிர்த்துக் குரல் எழுப்பிய திரு.கோவிந்தராஜ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.


ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.



இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், ஊழியர் யாராவது பணியில் இருந்து விலகினாலோ,நீக்கம் செய்யப்பட்டாலோ தினகரன் அலுவலகத்தில் கையொப்பம் இடும் வருகைப் பதிவேட்டில் அந்த ஊழியரின் பெயருக்கு முன்பு பேனாவால் நீக்கம்,விலகல் என்று எழுதி விடுவார்கள்.

ஆனால் கோவிந்தராஜ் பெயருக்கு முன்னால் எதுவும் எழுதாமல் பென்சிலால் ஒரு கோடு மட்டும் போட்டிருக்கிறார்கள்.நாளை வழக்காடு மன்றத்தில் வழக்கு வரும் பொழுது பதில் சொல்ல ஏதுவாக இருக்கும் என்று 'முன் எச்சரிக்கையாய்' விட்டு வைத்திருக்கிறார்களாம்.

நாட்டைச் சுரண்டியது மட்டுமல்லாமல், தனது தொழில் கூட்டாளியான தாத்தாவையே சன் குழுமப் பங்குப் பரிவர்த்தனையில் சுரண்டிப் பத்திரிகை நடத்தும் கும்பலுக்கு, அடியாள் வேலை பார்க்கும் ஆர்.எம்.ஆர் போன்றவர்கள் இத்துறையில் எடிட்டராய்க் கோலோச்சும் பொழுது,உண்மையான‌ செய்தியாளனின் மீது அக்கறை எப்படி வரும்..?


Saturday 15 March 2014

தினமலர்-இந்தப் பொழப்புக்கு......





மிழ்நாட்டில் எப்படியாவது தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று 'இன' உணர்வுடன் தினமலர் களத்தில் இருக்கிறது. பா.ஜ.க.தலைமையிலான  கூட்டணிக்கு தரகு மணியனை விட முன் வரிசையில் நின்று பாடுபடுவது தினமலர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

அதில் சின்ன எடுத்துக்காட்டு தான் இன்றைய (15-04-2014 ) தலைப்புச் செய்தி.



பா.ஜ.க. கூட்டணியை உருவாக்க, இதுவரை விஜயகாந்த் ஆதரவு, எதிர்ப்பு,மிரட்டல்,இட்டுக்கட்டுதல் என செய்திகளை வெளியிட்ட தினமலர், காரியம் கை கூடி வரும் இந்த நேரத்தில் விஜயகாந்த் எங்கே கூட்டணியை விட்டுப் போய்விடுவாரோ என்ற‌ பயத்தில் அதனை வெளிக்காட்டாமல் கழற்றி விடப்படுமா ? என்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கு அருகிலேயே பச்சமுத்துவின் இன்னொரு மிரட்டல் பேட்டி வேறு..

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை இதுவரை யாரும் அண்டிப் பிழைத்ததில்லை.தேசிய கட்சிகள் தான் மாநிலக் கட்சிகளை நம்பிப் பிழைத்து வருகின்றனர் என்பது உண்மை.

திமுக காங்கிரசை கூட்டணியில் சேர்க்க மறுப்பதும்,அதிமுக கம்யூனிஸ்டுகளை கழட்டி விட்டதும் அதற்கு எடுத்துக்காட்டு. ஆனால் என்னமோ தேசியக் கட்சிகள் அண்டிப்பிழைக்க வேண்டுமா என்று பா.ஜ.க.தொண்டர்கள் கொதிப்பதாக அண்ணா சாலை அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வழக்கம் போல் பொய்யை எழுதுகிறது.தினமலர் அலுவலகத்தில் யாராவது கொதித்ததை தான் இப்படி எழுதுகிறது என்று நினைக்கிறோம்.

தே.மு.தி.க.வை கழட்டி விடத் திட்டமிட்டுள்ளதாகவும் எழுதுகிற‌து.விஜயகாந்தைக் கூட்டணிக்கு அழைத்து வர அந்தக் கட்சிக்கு தூது மேல் தூது அனுப்பியதும்,தரகர் மேல் தரகர் அனுப்பியதும், அலுவலக வாசலில் காத்திருந்ததும் தினமலருக்கு மறந்திருக்காது.

அது தெரிந்தும் இப்படி எழுதுவது வேறொன்றுமில்லை.நம்மை விட்டுத் தே.மு.தி.க.எங்கும் போய் விடக் கூடாது என்னும் பயம் தான்.மிரட்டுவது போல் செய்தி வெளியிடுகிற‌து. (எல்லாக் கட்சிகளையும் மூன்று மாதம் நட்டாற்றில் விட்ட விஜயகாந்த் இத‌ற்கெல்லாம் பயப்படுபவரா என்ன..? )

அது தான் இந்த மிரட்டல் தலைப்புச் செய்தி.நாளை கூட்டணி உறுதியாகி விட்டால் சுபம் என்று தலைப்பு வைக்கும்.

--

இது தேர்தல் களம் என்னும் இணைப்பில் இன்று வெளியான தலைப்புச் செய்தி.





தொகுதிக்கு நான்கு பேர் வைத்திருக்கும் அழகிரியின் மூலம் தி.மு.க.வை வீழ்த்த காங்கிர‌ஸ் திட்டமிடுகிறதாம்.இதன் பலன் பாரதிய ஜனதாக் கட்சிக்கு கிடைக்குமாம்.ஆகவே தான் மோடியும் ராஜ்நாத் சிங்கும் அழகிரியைச் சந்தித்தனராம்.இந்த திட்டத்தில் காங்கிரஸ்,பாரதிய ஜனதாக் கட்சி இரண்டும் மறைமுக கூட்டணியாம்.இதற்கு  ஆதரவு கோரித்தான் அழகிரி ரஜினியைச் சந்தித்தாராம்.இதன் மூலம் தி.மு.க. தோல்வி அடையுமாம்,பாரதிய ஜனதா வெற்றி பெறுமாம்.

படிக்கும் நமக்கு சிரிப்புத் தான் வருகிறது.

கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தினமல்ர் எழுதுகிற‌து. பேனாவில் 'மை'க்குப் பதில் பொய்யை நிரப்புவார்களோ..?

இந்தப் பொழப்புக்கு... 

Monday 10 March 2014

மவுண்ட் ரோடு மூடர் கூடம்...!


the hindu,சீக்கியர்,புல்லர்,சதாசிவம்

குத்தூசி குருசாமி ஹிந்து பத்திரிகையை "மவுண்ட் ரோடு மகா விஷ்ணு" என்று அழைத்தார். நாம் தி இந்து பத்திரிகையை "மவுண்ட் ரோடு மூடர் கூடம்"என்று நாமகரணம் சூட்டுகிறோம்.

ஆரம்பித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும், புகைப்படத்துக்கு குறிப்பு எழுதுவதில் இருந்து தலைப்பு வைப்பது வரை நிறையப்பிழைகளாக இன்னும் நாளிதழின் வரையறைக்குள் இடம்பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறது.

எடுத்துக்காட்டாய் து.ரவிக்குமார் இந்த நாளிதழின் ஆலோசகர் மற்றும் தொட‌ர்ச்சியான பங்களிப்பாளர்.ஆனால் அவரது பெயருக்கு கீழேயே சட்டமன்ற‌ உறுப்பினர் என்று எழுதினார்கள்.இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

இந்த வரிசையில் சமீபத்திய எடுத்துக்காட்டு சமஸின் கட்டுரை.

 நடுப்பக்க கட்டுரை எவ்வளவு முக்கியத்துவமான இடத்தைப் பெற்ற‌து என்பது இதழியல் தொடர்புடைய அனைவருக்கும் தெரியும். ஆனால் சமஸின் கட்டுரை தகவல் பிழைகளும்,இட்டுக்கட்டப் பட்ட தகவல்களுமாய் நிரம்பிக்கிடக்கிற‌து. சமஸ் தனது கட்டுரையில் எந்த நிலைப்பாடும் எடுக்கலாம்.அது அவரது உரிமை. ஆனால் அதனை தர்க்க ரீதியாகவும் கருத்து வழியாகவும் நிலைப்ப‌டுத்த வேண்டும். நினைத்ததை எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்தக் கட்டுரை எவ்விதப் பொறுப்புமற்று வாசகனை மூடனாகக் கருதி எழுதப்பட்டுள்ளது.
மிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் என்னும் பெயரில் சமஸ் என்பவர் மார்ச் 4,2004 அன்று எழுதிய நடுப்பக்க கட்டுரையும் அதற்கு ஒரு காரணம்.சமஸ் என்பவர் இதற்கு முன் தினமலர்,தினமணி உள்ளிட்ட செய்தித்தாள்களில் பணியாற்றியவர்.இப்பொழுது தி இந்து நாளிதழின் நடுப்பக்க கட்டுரைப் பொறுப்பாளரும் இவரே.
அந்தக் கட்டுரையை முதலில் படித்து விடுங்கள். சமஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் ' தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் ' என்னும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தாராம்.அதன் விளைவாய் ஒரு நடுப்பக்க கட்டுரையை எழுதி விட்டார். யார் அந்த சுவரொட்டியை ஒட்டியது,எந்தக்கட்சி அல்லது அமைப்பு என்னும் எந்தக் குறிப்பும் இல்லை.சமஸின் வார்த்தைகளில் இதை மட்டும் நம்புவோம்.

ஆனால் தோராயமாய் 10 நபர்கள் இணைந்து அடித்த ஒரு சுவரொட்டியை ஒட்டுமொத்த தமிழினத்தின் அறிவுத்திறன் மற்றும் மனசாட்சியாய் உருமாற்றி அதனைக் கழுவிலேற்றத் துடிக்கும் சமஸின் நேர்மையைச் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.
இனி சமஸின் கட்டுரையை வரிக்கு வரி போஸ்ட்மார்ட்டம் செய்ய‌ விரும்புகிறோம். //ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்’ படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. //
வீரபாண்டிய கட்டபொம்மனை நடிகர் சிவாஜி படமாகவும்,திருவள்ளுவரை யாரோ ஒருவர் வரைந்த ஓவியத்தின் மூலமும் தான் இதுவரை தமிழ்ச்சமூகம் அறிந்திருந்தது என்று நினைத்திருந்தோம்.இப்பொழுது தான் தெரிகிறது,‘இன்விக்டஸ்’ படத்தில் மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் என்பவரின் படத்தைப் போட்டு, சமசும் அவருடைய ஆட்களும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் என்று.



இவ்வளவு ஏன்..? லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு எடிட்டோரியலில் வேலை பார்க்கும்  தி இந்து பத்திரிகையிலேயே தினமும் எத்தனையோ பிழைகள்.இன்று கூட ஒரு மருத்துவரின் புகைப்படத்திற்குப் பதிலாக இன்னொருவரின் புகைப்ப‌டத்தை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள்.ஆக 'நம்' இந்து பத்திரிகையின் லட்சண‌மும் இது தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் சமஸ்.
எந்த ஒன்றும் அது அதன் தளத்தில் எந்த அளவு பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதை வைத்துதானே, அதைக் கருதக்கூடியதாக ஏற்கமுடியும். ஆனாலும் மண்டேலா என யாரோ எவரோ சுவரொட்டி அடித்துவிட்டாராம், சமசுக்குப் பொத்துக்கொண்டு வருகிறது, 'அறச் சீற்றம்'! இந்து பத்திரிகையில் யார் யாருக்கு எப்படி நியமனம் நடந்தது என்பதை சமசின் கதையை வைத்து, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என சொல்லிவிடலாமா என்ன ? ’தேசியத் தொலைக்காட்சிகளில், அர்னப் கோஸ்வாமிகளும் ராஜ்தீப் சர்தேசாய்களும் தமிழர்களை இன வெறியர்களாகச் சித்தரித்துக் கத்தும்போது, வேகமும் கோபமும் வரத்தான் செய்கிறது. ஆனால், நம் ஆட்கள் சிலர் அடிக்கும் கூத்துகளை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு வேறு எப்படித் தோன்றும் ?’- இப்படிச் சொல்லிச் செல்லும் சமஸ் ஐயா, ‘நம்’ எனும் சொல்லை இந்தக் கட்டுரை நெடுக அதிகமாகவே பயன்படுத்துகிறார். அதற்கான பொருளை வாசகர் தெளிவாகப் புரியும்படி சொல்லாதது, என்னென்ன நோக்கங்களுக்காக என்பது அவருக்குதான் ’பஸ்டமாக’ப் புரிபடும். அதனால் வாசிக்கிறவர்களுக்கு ’தர்க்கநியாயப்படியும் அவர்களுக்குண்டான அறிவுப்படியுமே ‘நம்’ எனும் சொல்லுக்குப் பொருள்கொள்ள முடியும்; இது தவிர்க்கமுடியாதது. 
’தேசியத் தொலைக்காட்சி’ என்கிறார் சமஸ். அதற்கு என்ன வரையறை? தி ஹிண்டு இன்றும் மதராஸி ஐய்யங்கார் பத்திரிகைதான், இந்தியாவின் பல திசைகளிலும். உலக நியாயம் பேசத் தெரிகிறது, இது தெரியாதா? அந்த ’தேசிய’ தொலைக்காட்சிகளில் இந்த தேசத்தின் எத்தனை தேசிய மொழிகளில் (ஆங்கில எழுத்து விளக்கம் இல்லாமல்) அப்படியே பேசுவதை ஒளிபரப்புகிறார்கள். இந்தி மட்டும்தான் இந்தியாவில் தேசிய மொழியா? இது ஒரு பக்கம். 
கோஸ்வாமிகளும் சர்தேசாய்களும் சித்தரித்துக் கத்துகிறார்கள் என்பதை சமசுக்குள் இருக்கும் ஒரு நியாயவான், ஒத்துக்கொள்கிறான். செய்தியாளர்களாக இருக்கவேண்டியவர்கள் சித்தரிக்கிறார்கள், அதை வலுவூட்டக் கத்துகிறார்கள் எனும்போது, அதை எதிர்க்கும் சமசின் சில ஆட்கள் கூத்து அடிக்கிறார்கள்; ஆம் அவரே சொல்கிறார், நம் ஆட்கள் என்று. அடுத்த வாக்கியத்திலேயே, அவற்றை ’வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு வேறு எப்படித் தோன்றும் ?’ என்று அதாவது இப்படித்தானே தமிழர்களை இனவெறியர்களாகச் சித்தரிக்க முடியும்; கத்த முடியும் என்பது சானா மானா ஸ்-ன் கருத்து. //மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது சரி. ஆனால், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்ற மற்றவர்கள் ஆகிவிடுவார்களா?// - இந்த குரலில்தான், தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அந்தந்த இன உணர்வாளர்களும் வேறுவகையில் கேட்கிறார்கள், “ மரண தண்டனை விதிக்கப்பட்டதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? 
ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என இந்த தேசத்தின் தந்தை (சமஸ் ஒரு காந்தியவாதி என்பதை நாம் நன்கு அறிவோம். )கூறிச்சென்ற முத்திரை வாசகத்தைப் பற்றி சமஸ் போன்ற ‘பரந்துபட்ட சிந்தனையாளர்களும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களும்’ என்ன நினைக்கிறார்கள்? / தனி சீக்கிய மாநிலம் கோரும் குழுக்கள், “சீக்கிய தேசத்தை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்று ரோஜனா, புல்லர் விவகாரங்களைக் கொண்டாடுகின்றன. இதற்கும் “எழுவர் விடுதலை, தமீழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்ற கொண்டாட்டத்துக்கும் என்ன வேறுபாடு ? / சானா மானா ஸ்-ன் இந்த வரிகளே, அடிப்படையில்லாத சக்கையானவைதான். இந்த ஒப்பிடே இட்டுக்கட்டப்ப‌ட்டதாக கருதுகிறோம்.பஞ்சாபிலோ தமிழ்நாட்டிலோ இந்த குறிப்பிட்ட தண்டனைக் கைதிகளின் மரண தண்டனைக் குறைப்பை/ விடுதலையைக் கோருபவர்களில் எத்தனை விழுக்காட்டினர், சீக்கிய தேசத்துக்கும் தமிழீழத்துக்குமான பயணத்தின் முதல் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்? என்பதை நெஞ்சில் துணிவும் நேர்மையும் .. இருந்தால், சானா மானா ஸ். (இந்து நாளேட்டில் சமஸ் எனும் நபரை கட்டுரைப் பக்கத்துக்குப் பொறுப்பாளராக நியமித்த பத்திரிகையுலக கிரகஸ்தர் யாரோ, அவரும்) இதை ஒரு வரியிலேனும் தகவலாக நிறுவவேண்டும். சும்மா சொக்குப்பொடி போட்டானே மச்சான் மச்சான் என்கிறபடி, தலையங்கப் பக்கத்துக்கு எதிராக, கட்டுரை எனும் பெயரில் எதையாவது எழுதக்கூடாது. /இந்தியாவின் மோசமான அரசியல் படுகொலைகளில் ஒன்று ராஜீவ் படுகொலை./ இந்த வரிகளுக்காக, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் இருந்தால், இந்த நீதித்துறை அமைப்பின் முன்னால், சமசும் தி இந்து நாளிதழும் மன்னிப்பு கேட்கவேண்டும். ராஜீவ் கொலைவழக்கில் இது பற்றி உச்ச நீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பதே தெரியாமல், பாரம்பரியம் மிக்க பத்திரிகை என்ற வாசகத்தைத் தாங்கிக்கொண்டு, மிகமிக மட்டமாக இப்படி எழுதுவதற்கு உண்மையில் நிறைய துணிவு வேண்டும்? ராஜீவ் காந்தி படுகொலை,அரசியல் படுகொலையாக கருத இடமில்லை.தனி நபர் கொலையாகத் தான் கருத வேண்டும் என்று உச்சநீதிமன்மே தெளிவாகச் சொல்லியிருக்கிற‌து.
இந்த வழக்கின் தன்மை என்ன? அது எந்த சட்டத்தின்கீழ் நடத்தப்பட்டது? உச்சநீதிமன்றத்தில் அதன் தீர்ப்பின் சாராம்சம் என்ன? இந்த சம்பவம் குறித்த ஜெயின் கமிசன் அறிக்கை என்ன சொன்னது? அதன் கருத்துகள், பரிந்துரைகள் கணக்கில் எடுக்கப்பட்டதா? வழக்கின் விசாரணையோடு சேர்த்து, ஆராயப்பட்டடதா? - இவை போன்ற எத்துணை கேள்விகள் ?

இந்திய அரசியலமைப்பின் குடிமக்கள் உரிமைகள் வழங்கப்பட்டனவா? பறிக்கப்பட்டனவா? இதற்கெல்லாம் சானாமானாஸ்-ஆல் பதில்தேட முடியவில்லையா? எதைப் பற்றியும் ஒரு கட்டுரையை எழுத உட்காரும் முன்பு, அதைப் பற்றிய தரவுகளை குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஆவணங்களுடன் சரிபார்த்திருக்க வேண்டுமல்லவா? அது முடியாவிட்டால் தொடர்புடைய குறிப்புகளை வாசிக்கவாவது செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால், தூக்கை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களின் குரலை, எம கழுத்தறுத்துக்கொண்டு இந்தக் கட்டுரை ஏன் எழுதப்பட்டு இருக்கிறது? THE HINDU கம்பெனி, சமுதாயத்தில் இன்னின்ன.. இப்படி இப்படி இருக்கவேண்டும் என்று கொள்கையை வகுத்துச் சொல்வதற்காக, ஒரு நியாயஸ்தாபனத்தை நடத்திவருகிறார்கள். அரசியல் மற்றும் பொதுவிவகாரங்களுக்கான தி ஹிண்டு மையம் எனும் நிறுவனம் மூலம் ஜனநாயகம் பற்றிப் பேசுவதால், அவாள் கம்பெனியிலேயே, அபாண்டம் நடக்கலாமோ? அப்படி நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாமோ? தமிழ்ப் பத்திரிகையுலகின் முன்னணி ஆசிரியராக உட்கார்ந்திருந்த வைகுந்தம் கதிர்வேல், இதற்கு பட்டுக்குஞ்சம் வேறு கட்டுகிறார். ’அவர்களுக்கு வாய்க்காத மேடை உங்களுக்கு வசமாகி இருக்கிறது’- எவ்வளவு ’நிதர்சனமான’ சொற்கள், இவை. ஆம், யாருக்கும் வாய்த்திராத மேடை சானாமானாஸ்.க்கு வாய்த்திருக்கிறது என்பது பெரும் உண்மை! /நீதிமன்றம் இதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதும் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்திருப்பதும் மனிதாபிமான அடிப்படையில்தானே தவிர, அவர்கள் நடந்த குற்றத்தோடு துளியும் தொடர்பற்றவர்கள் என்கிற அடிப்படையில் அல்ல./ - இந்தத் தகவல், சைதாபேட்டை டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றும் சீனாபேனாவுக்குகூடத் தெரியும். /இத்தனை நாட்களும் அப்பாவிகள் என்று கூறியே அவர்கள் விடுதலையைக் கோரினோம். இப்போது தியாகிகள் என்கிறோம். எனில், அவர்களை யாரென்று அடையாளப்படுத்துகிறோம்?/ இத்தனை நாட்களும் அப்பாவி என சம‌ஸ். எப்போது சொன்னார்? அவர் சார்ந்த இந்து நிறுவனம் எப்பொழுது சொன்னது.?அப்படிச் சொல்லியிருந்தால் எந்த அடிப்படையில்? அதே அடிப்படையில்தான் இன்றும் ஏழு பேரின் விடுதலை கோருகிறவர்களும் சொல்கிறார்கள். ஏழு பேரும் தியாகிகளா இல்லையா என்பதை, நீதியான அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியான சட்டவிசாரணையைத் தொடங்கி முடித்தபிறகு, வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள், அவர்களின் விடுதலையைக் கோருகிறவர்கள். ஏழு பேரையும் அப்பாவிகள் எனக் கூறியதாகச் சொல்லும் சமஸ் போன்றவர்கள், இன்று வேறெப்படி அடையாளப்படுத்துவது என ஏன் 'மவுண்ட் ரோடு மூடர் கூட' வாசகர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும்? அப்படியென்றால், யாரைப் பற்றியும் எதுவும் ஆய்வுசெய்யாமல் அப்பாவிகள் எனச் சொல்லிவிட்டு, பிறகு சமசுகளின் சௌகர்யத்துக்காக இந்து பத்திரிகை வாசகர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்களாம்! /பேரறிவாளன் தூக்குக் கயிற்றின் முன் நின்றபோது, கூக்குரலிட்டோம். அப்சல் குருவின் குரல்வளை நெரிபடும்போதோ, வாய் மூடி. முகம் திருப்பி நின்றோம்./ THE HINDU , இப்போது இருக்கும் தி இந்து இரண்டு நாளேடுகளின் அலுவலகங்கள் வழியாகவும், 20ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், 1999ஆம் ஆண்டில் மரணதண்டனையை எதிர்த்து மிகப்பெரிய பேரணியாக மகக்ள் சென்றது, வரலாறு. அப்போது முதல் இப்போதுவரை, மரண தண்டனை ஒழிப்பை விரும்புவோர் கோருவது, எந்த மனிதனுக்கும் நாகரிக சமுதாயம் அந்த தண்டனையைத் தரக்கூடாது என்பதுதான்!
இப்பொழுது தமிழ்நாட்டில் தூக்குத் தண்டனை ஒழிப்புக்காய் குரல் கொடுக்கும் அனைவரும் அப்சல் குரு தூக்கில் போடப்படும் பொழுதும் எதிர்த்தவர்கள் தான் என்பது செய்தித்தாள்களைப் படித்தால் தெரியும். இந்து நிர்வாகம் போல நாட்டுக்கு,போராட்டத்துக்கு ஒரு கொள்கை வைத்திருப்பது தூக்குத் தண்டனை ஒழிப்புக்காய் குரல் கொடுப்பவர்கள் அல்ல.
சாதாரண வளர்நிலையில் உள்ள செய்தியாளரே சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவேண்டும் எனும்போது, அறம்பேசுவதாய்ச் சொல்லும் நாளேட்டின் கட்டுரைப் பக்கத்துக்குப் பொறுப்பான ஒருவர், கொட்டும் சொற்களில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்? என்ற அடிப்படை நியாய உணர்வுகூட இல்லையே, சமசிடம்? /“என் தாய் - தந்தை கையால் சாப்பிடக் காத்திருக்கிறேன்” என்கிற அரித்ரா குரல் நமக்கு வலிக்கிறது. “என் தந்தையை இழந்தேன். இனி, அவர் திரும்பிவரப்போவதில்லை. ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்கிற ராகுல் குரலின் வலி கேலிக்குரியதாகிறது என்றால், நாம் யார்?/ ராகுலின் குரலை தமிழ்நாட்டில் அறுதிப் பெரும்பான்மையினர் கேலி செய்தார்கள் என்று சொல்லும் சமஸ் அதனை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி,முருகனின் குழந்தை அரித்ரா,சமஸ் குறிப்பிட்ட மேற்குறிப்பிட்ட தனது பேட்டியிலேயே ராகுலின் துயரத்தைப் புரிந்து கொண்டதாய் எழுதியிருக்கிறார்.அது சமஸின் கண்ணுக்குள் தட்டுப்படவில்லையா..? குற்றம் சாட்டப்பட்ட இன்னொருவரான பேரறிவாளனின் தாயார்அற்புதம் அம்மாள் ராஜீவ் காந்தி மரணத்தை சமஸூக்கு அளித்த பேட்டியில் கண்டித்திருக்கிறார்.இன்னொருவரான சாந்தனின் தாயார் வருத்தம் தெரிவித்து இன்னொரு இதழில் பேட்டி அளித்திருக்கிறார்.இக்குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என நிறுத்தப்ப‌ட்டவர்களின் ரத்த உறவுகளே வருத்தம் தெரிவிக்கின்றனர்.இவர்களின் குரலை செவிமடுக்காத சமஸ் யார் குர‌லை இங்கு எதிரொலிக்கிறார்..?
//ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” // இந்த நாடு மன்னராட்சியால் நடத்தப்படுவது அல்ல என்பது ராகுலுக்கும் தெரியவில்லை; சமசுகளுக்கும் தெரியவில்லை. அல்லது அவர்களுக்கு அது இன்னும் உரைக்கவில்லை! இந்திய அரசியலமைப்பின் எந்த இடத்திலும் முன்னாள் பிரதமருக்கு ஒரு நீதியும் சாமானியனுக்கு ஒரு நீதியும் என குறிப்பிடப்படவில்லை. இப்படி இருக்கும்போது, தமிழர்களின் சார்பில் கேட்கிறார்கள், ’சமஸ் நீ யார்?’ /நேற்றுவரை யாரும் மரண தண்டனையின் பெயரால் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்று இங்கு கூட்டங்கள் நடந்தன./ (இன்றும் நடக்கின்றன, அது தெரியாவிட்டால் மன்னார்குடிக்குப் போய் வேறு வேலை பார்க்கலாம்) /அதுவே அஹிம்சை என்றோம். இன்றைக்கு, ராஜீவ் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று அவருடைய கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களை நோக்கிக் கல் வீசப்படுகிறது;/ எவ்வளவு பெரிய பொய்மூட்டை இது? திருச்சியில் பொது இடத்தில் பிரச்சாரம் செய்த மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தினார்களே, காங்கிரஸ்காரர்கள்? அதைப் போலவா? தமிழக அரசின் அனுமதியுடன் சத்யமூர்த்திபவன் முன்பு அறப்போராட்டம் செய்தவர்களை தலைக்கவசம் அணிந்து, தாக்குதல் நடத்தினார்களே? அதைப் போலவா? ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது, திமுகவினரின் வீடுகளைத் தேடித்தேடி போய்த் தாக்கிய, சூறையாடிய காங்கிரஸ் கோமான்களைப் போலவா? இந்த வரிசையை இன்னும் நீட்டிக்கொண்டே போகலாமே? 

சென்னையில் காயிதே மில்லத் கல்லுரி பின்புறம் காங்கிரசார் நடத்திய கூட்டம் எப்ப‌டி நடந்தது என்பதை கலந்து கொண்ட காங்கிர‌ஸ்காரனிடம் கேட்டாலே சொல்லுவானே..!  /ராஜீவ் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு, தலை தகர்க்கப்படுகிறது. எனில், நாம் சொல்ல விழைவதுதான் என்ன?/
இது பற்றி தமிழக காவல்துறை விசாரணை இன்னும் முடியவில்லை எனும்நிலையில், அந்த விசாரணையில் நம்பிக்கை இல்லாத- நாளேட்டின் கட்டுரைப் பகுதிப் பொறுப்பாளர் நிலையில் இல்லாத போக்கு இல்லாதவர்கள்-  மற்றும் போக்கு இலிகள்- வாய்க்கு வந்ததைப் பேசவும் எழுதவும் செய்யலாமா..?

ந்தக் கட்டுரை, தகவல் பிழைகளும் கட்டுரை எழுதும் தகுதிக்குரிய குறைந்தபட்சத் தகவல் இல்லாமலும் தமிழீழத்துக்கு எதிரானது ஹிண்டு என்று அதன் முதலாளி சொன்னதால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தங்கள் இடத்தை தக்க வைக்க, பணியிடத்தில் உயர்வை நோக்கிப் பயணிக்க திட்டமிட்டு இந்தக்கட்டுரையை தி இந்து எடிட்டோரியல் வெளியிட்டுள்ளது. அதற்கு ஏழு பேர் உயிர்தான் கிடைத்ததா..? இந்தப் பிரச்னையில் கட்டுரை எழுதிய சமஸ் முழுக்க முழுக்க நடுநிலையின் படியும் நியாயத்தின் படியும்,அனைவருக்குமான ஊடகத்தில் எழுதுகிறோம் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இல்லாமல் நிறுவனத்தின் பாலிசிக்கு ஏற்றபடி எழுதியுள்ளார்.


முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யருடன் சமஸ் (புகைப்பட உதவி சமஸ் வலைப்பூ)
சமஸ் நிறுவனத்தின் கொள்கையைத் தனது கொள்கையாக மாற்றிக்கொண்டு இப்படிச் செய்வது இதுமுதல் முறை அல்ல. இதற்கு முன் அவர் இந்து முதலாளி என்.ராம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். அதன் இணைப்பு இது தான். நல்ல திரைக்கதையாக வடிவமைக்கப்ட்ட இந்த 'நேர்காணலை' நாம் விரிவாக ஆராய விரும்பவில்லை.அதற்குத் தேவையும் இல்லை.
அதில் குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் குறித்து மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். செய்தியில் கோணம் கலக்கக் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்துபவர் நீங்கள். //என்று இந்து ராமிற்கு சமஸ் 'ந‌ற்சான்றிதழைக்' கொடுக்கிறார்.


இந்து ராம் செய்தியில் விமர்சனம் கலக்காத நடுநிலையானவரா..?


உலகத் தமிழர் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாத படுபாதகப் படுகொலை, ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகமான செஞ்சோலை மீது, சிங்கள ராணுவம் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில், 51 குழந்தைகளும் நான்கு பள்ளிப் பணியாளர்களும் உலக மானுடத்தைக் குலுக்கியெடுக்கும்படி கொல்லப்பட்டனர். அது குறித்த செய்திக்கு கீழ்க்கண்ட தமிழ்நெட் இணைப்பைப் பாருங்கள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19229

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19243

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19281
ஆனால் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளிதழ் எப்படித் தலைப்பு கொடுத்திருக்கிற‌து பாருங்கள். அப்பொழுது என்.ராம் தான் ஆசிரியர்.செய்தியில் விமர்சனம் கூடாது என்னும் அளவுக்கு சிற‌ப்பான ஆசிரியர் தலைப்பையே உள்நோக்கத்துடன் திருத்தி வைத்திருக்கிறார்.

http://www.thehindu.com/todays-paper/colombo-rejects-ltte-claim/article3091110.ece
51 குழந்தைகள் உள்பட 55 பேர் வான்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியை, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பைத்தானே நேர்மையான,நடுநிலையான‌ பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக்குவார்கள்.ஆனால், ஹிண்டுவோ அப்போதைய சிங்கள அரசின் பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரின் பேட்டியை செய்தித் தலைப்பாக்கியது. 

இந்த நியாயம்கூட வேண்டாம்; இவர்கள்தான் நடுநிலைவாதிகள் அல்லவா? அந்தச் செய்திக்கு உள்ளேயே, ஐநா குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் இலங்கை பொறுப்பாளர் குழந்தைகள் கொல்லப்பட்டதைக் குறிப்பிடுகிறார். அதையும் மீறி  ஹிந்து ஆங்கில நாளிதழ் சிங்களப்படையைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. எனில் இங்கு சிங்களனின் கைக்கூலியாகச் செயல்பட்டதால், அவரையும் அறியாமலேயே தன்னை வெளிக்காட்டியுள்ளார்.

ஐநா உறுப்பு நாடு ஒன்றின் போர்ப் பிரதேசத்தில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான செய்தியில் நடுநிலைமை என வைத்துக்கொண்டாலும் யுனிசெஃப் அதிகாரியின் கருத்தைத்தானே முதலில் பதிவு செய்திருக்கவேண்டும். இது தான் அவரது 'நேர்மை'. இவருக்குத் தான் சமஸ் 'ந‌ற்சான்றிதழ்' அளிக்கிறார்.
அதே நேர்காண‌லில் இருந்து இன்னொரு எடுத்துக்காட்டு. 

உங்கள் நண்பர் ராஜபக்‌ஷ முன்னெடுத்த இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் போர்க் குற்றங்கள் நடந்ததும் இப்போது அம்பலமாகிவிட்டது. என்ன சொல்கிறீர்கள்?
என்.ராம்: இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். // போர்க்குற்றங்கள் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று என்.ராம் ஒப்புக் கொள்கிறார்.ராஜபக்ச தனது நண்பர் என்பதையும் மறுக்கவில்லை. 

ஆனால் இதுவரை ராஜபக்சவின் போர்க்குற்றங்களை இந்து ராம் பிற நாடுகளின் போர்க்குற்றங்களைக் கண்டிக்கும் அளவுக்கு கண்டிக்கவில்லை. அது ஏன்?
இதை சமஸ் கேள்வியாக்கி இருக்க வேண்டுமா இல்லையா? உன் நண்பன் போர்க்குற்றவாளி என்பதனால் அவரைப் பாதுகாக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுப் பதில் வாங்கி இருக்க வேண்டும். இது சமசுக்குத் தெரியாதா..? யாரிடம் கேள்வி கேட்பது? 

பதில் சொல்வது, முதலாளியல்லவா? அமைதியாய்க் கடந்துபோகிறார்..!

முதலாளியிடம் எதிர்க் கேள்வி கேட்பது தர்மசங்கடம், தன்னால் இயலாது என்று அவர் கருதியிருந்தால் இந்த நேர்காணலை செய்யாமல் ஆரம்பத்திலேயே தவிர்த்திருந்திருக்கலாம். 

இதற்கு எதற்கு நேர்காணல் என்று பெயர் போட வேண்டும்.இந்துவில் வேலை பார்க்கும் குமாஸ்தா போதுமே..?

இது தான் சமஸ். நிறுவனம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்வதும் எழுதுவதும்தான் அவரது பணி. சுயமாய்ச் சிந்திக்கவும் செயல்படவும் திராணி உள்ள‌ சுயேட்சையான பத்திரிகையாளர் அல்லவே? 

இந்த பத்திரிகையாளர்கள் தான் கருணாநிதி,ஜெயலலிதா,சோனியா,நரேந்திர மோடி என அனைவரையும் விமர்சிக்கும் வல்லமை படைத்தவர்களாக கருதிக் கொள்கின்றனர்.
ஒன்று மட்டும் உறுதியாகிவருகிறது. தி இந்து நாளேடு தொடங்கப்பட்டதன் வணிக நோக்கம் தவிர்த்து, அதன் இலக்கை நோக்கி, முழுவீச்சில், 

அவாள் பாணியில் சொல்லவேண்டுமானால்,

‘அவதார லக்சியம்’ மூன்றாவது கியரில் எகிறிக்கொண்டு போகிறது.

தி இந்துவின் அவதார லட்சியத்தை நிறைவேற்ற சமஸ் அதிகமாகவே துடிக்கிறார்.

ஒரே ஒரு வேண்டுகோள்.

சானா மானா எனும் முன்னெழுத்துகளுடன், பெற்றார் இட்ட ஸ்டாலின் எனும் பெயரைச் சகிக்கமுடியாமல், சமஸ் எனப் பெயரை மாற்றிக்கொண்டது, உங்களின் தனி உரிமை.

ஒரே ஒரு வேண்டுகோள், உங்கள் பெயர் பாதியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது. பின்பாதியான, கிருத‌ம் என்பதையும் சேர்த்துக் கொண்டால்தான் உங்களின் 'தி இந்து' அவதாரம் பூரணத்துவம் பெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம், பத்திரிகைக் கோமானே!