Tuesday 28 October 2014

குமுதம் 'மேல்மாடி' காலி..? இதுவா உங்க சோலி..!






குமுதத்தில் வெளியான‌  பழைய நகைச்சுவை.

இரண்டு நண்பர்கள்.

முதலாமவன்,"இன்று திருவீதி உலா பார்க்க‌ போகலாமா ? என இரண்டாமவனைப் பார்த்துக் கேட்டான்.

இரண்டாமவனும் மிக்க மகிழ்ச்சியுடன் 'ஓ.பேஷா போலாமே" எனச் சம்மதித்தான்.

இருவரும் வேடிக்கை பார்க்க சென்றனர்.

முதலாமவன்," நம்ம‌ ராஜா குதிரையில் வருவது மிகவும் கம்பீரமாய் இருக்கிறதல்லவா..? எனக் கேட்டான்.

ராஜா யாரு..? குதிரை யாரு ..? என இரண்டாமவன் திருப்பிக் கேட்டான்.

முதலாமவனுக்கு அதிர்ச்சி.

"மேலே உட்கார்ந்திருப்பது ராஜா,கீழே இருப்பது குதிரை" என்றான்.

மேலேன்னா என்ன? கீழேன்னா என்ன ? என்று அடுத்த கேள்வியைப்போட்டான்.

முதலாமவன் அதிர்ச்சியாகி,மிகவும் கோபத்துடன்,அவனைக்கீழே தள்ளி,இவன் மேலே அமர்ந்து கொண்டு,இப்பொழுது நான் மேலே,நீ கீழே என்று இறுக்கமாய்ச் சொன்னான்.

'நீ' அப்படின்னா என்ன..? 'நான்' அப்படின்னா என்ன..? என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான் இரண்டாமவன் .

இப்பொழுது முதலாமவன் மிரண்டு போய் ஆளை விட்டால் போதும் என த்லை தெறிக்க ஓட்டம் பிடித்தான்.

கேள்வி கேட்ட இரண்டாமவனைப் போலத்தான் இன்றைய குமுதம் எடிட்டோரியல் டீம் இருக்கிறது.


ன்று வெளியானகுமுதம் வார இதழில் ஜெ... என்ற தலைப்பில் அட்டைப்பட கவர் ஸ்டோரி. குமுதம் அட்டை முழுவதும் லேமினேஷன்.நகரெங்கும் வண்ண போஸ்டர்.

'குமுதம்' இதழை தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் வரதராஜன் போயஸ் கார்டன் இருக்கும் திசை நோக்கியும்,மோடியின் வீடு இருக்கும் இடம் நோக்கியும் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கிய பின் தான் தனது அலுவலக சேரில் அமர்வார் என்பதால் நாம்  இந்தக் கட்டுரையை ஜெ.எதிர்ப்பு என்னும் கண்ணோட்டத்தில் துளியும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அதிகம் விற்பனையாகும் ஜனரஞ்சகமான இதழ் என்பதால் ஜெயலலிதா ஆதரவு நிலையை சுவாரசியமாகவும் அனைவரும் படிக்கும் வண்ண‌மும் சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

'மன உறுதி குன்றாத ஜெ...' 'பீனிக்ஸ் பறவை போல் திரும்ப உயிர்த்தெழுவார்' என்றோ அல்லது வழக்கு மேல்முறையீட்டில் 'ஜெ.வெல்வது உறுதி' என்ற வடிவத்தில் கட்டுரையோ அல்லது ஜெ.ஆதரவு நிலைய வித்வான்களின் கருத்தையோ,பொதுமக்கள் ஜெ.வுக்கு ஆதரவு நிலையில் முன்பை விட உறுதியாய் இருக்கிறார்கள் என்றோ 'மக்களின் முதல்வர் ஜெ...'என்ற ரீதியிலோ எதையாவது எழுதியிருப்பார்கள் அல்லது யாரையாவது விட்டுச் சொல்லச் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்து தான் வாங்கினோம்.

உள்ளே இடம் பெற்றிருந்தது 8 பக்க கவர் ஸ்டோரி.அதில் என்ன இடம்பெற்றிருந்தது என்னவென்றால் ஜெ.சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு வெளியிட்ட அறிக்கை,நடிகர் ரஜினி காந்த்,மத்திய அமைச்சர் மேனகா காந்தி  ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதங்கள்,பதிலுக்கு ஜெ.அனுப்பிய நன்றிக் கடிதங்கள் இது தான்.இதைத் தாண்டி ஒரு வார்த்தை கூட இல்லை.






ஜெ.அனுப்பிய அறிக்கை உட்பட அனைத்தும் 19 ஆம்தேதி,20 ஆம் தேதி தமிழ்,ஆங்கிலம் என அனைத்து ஊடகங்களிலும் (கலைஞர் தொலைக்காட்சி ,முரசொலி தவிர) வரி விடாமல் வெளிவந்து விட்டது. ஜெயா டிவி அரை மணிக்கு ஒருமுறை இரண்டு நாட்கள் இதனை ஒளிபரப்பியது. ரஜினி கடிதம் பின்னணி,மேனகா கடிதம் பின்னணி என சில ஊடகங்கள் அதனையும் கிசுகிசு எழுதி வெளியிட்டு விற்பனை செய்து விட்டன.

இந்த நிலையில் எட்டு நாட்கள் கழித்து வந்த வார இதழில் அதனை அப்படியே மறுபிரசுரம் செய்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்.? சரி.சிந்திக்க மூளையில்லாததால் அப்படியே பிரசுரம் செய்து தொலையட்டும்.

ஒவ்வொரு,அறிக்கை, கடிதம் முன்போ,பின்போ எடிட்டோரியல் கருத்தாக ஏதாவது நான்கு வார்த்தை எழுதியிருக்கலாம்,அதுவும் இல்லை.

வெறும்  இரண்டு வரி சொந்தமாய் எழுத முடியவில்லை.இதற்கு எதற்கு எடிட்டோரியல் டீம்..? இன்று எத்தனை பத்திரிகையாளர்கள் இதனைப் பார்த்து காறித் துப்பியிருப்பார்கள்..?

எட்டு  நாட்கள் முன்பு பேக்ஸில் வந்த அறிக்கையையும் மின்னஞ்சலில் வந்த புகைப்படங்களையும் அப்படியே லே அவுட் செய்வதற்கு எதற்கு எடிட்டோரியல் ஆட்கள்..? அவர்களுக்கு லட்சக்கணக்கில் தண்டச் சம்பளம்,அதுவும் செட்டியார் காசில்..?

 லே அவுட் ஆர்ட்டிஸ்ட் மட்டும் போதுமே..? அதுவும் அந்த லே அவுட்டும் மகா கேவலம்.

மூன்று ரூபாய்க்கு விற்பனை ஆகும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையே அம்மாவின் புராணம் பாடுவது தாண்டி சில நேரம் சுவராசியமாய் இருக்கிறது.

ஒரு ஜனரஞ்சக இதழ் எப்படி எல்லாம் இருந்திருக்க வேண்டும்..? எட்டு பக்கங்களை எப்படி எல்லாம் பதிவு செய்திருக்கலாம்..? ஜெயலலிதாவுக்கு ஆதரவாய் இரண்டு வரி ஸ்டேட்டஸ் முகநூலிலும் டிவிட்டரிலும் எழுதுபவர்களே எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்..? எவ்வளவு சுவராசியமாய் எழுதுகிறார்கள்.

பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனை மடையனாய்க் கருதுவது தானே இது..? இந்த அட்டையைப் பார்த்து அதிமுகவினரும் அதிகம் வாங்கியிருப்பர்.

இந்த லட்சணத்தில் "பிரசுரமாகும் கதை,கட்டுரை மற்றும் படைப்புகள் அனைத்திற்கும் பதிப்பாளரே உரிமையாளராவார்.மறு பிரசுரவும் செய்யவும் மற்ற‌ வேறு வகையில் படைப்புகளை பயன்படுத்தவோ நிர்வாகத்தினரின் முன் அனுமதி பெர்ரே செய்ய வேண்டும்" என்ற அறிவிப்பு வேறு.

இவர்களே அடுத்தவர்கள் அறிக்கை,கடிதத்தை வெளியிட்டு பக்கம் நிரப்புகிறார்கள்.இதில் முன் அனுமதி வேறு பெற வேண்டுமாம்.உங்க காமெடிக்கு அளவே இல்லையா..?

குமுதம் கூமுட்டைக‌ள் கூட்டத் தலைவர் ப்ரியா கல்யாணராமன் 


.தி.மு.க.கட்சியினர் தனது தலைவி கைதை ஒட்டியும்,அவர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆக வேண்டியும் விதவிதமான வடிவங்களில் ஆர்ப்பாட்டம்,போராட்டம்,மறியல் என பல்வேறு கூத்துக்களை நடத்தினர்.இதில் சுயநலம்,விசுவாசம்,பக்தி,அடிமைத்தனம்,அராஜகம் என பல பொருள்கள் இருக்கின்றன.




ஆனால் அவர்களில் சிலர் நடத்தியது கோமாளிததனமாய் இருந்தாலும் வித்தியாசமாய் இருந்தது. ஏனென்றால்அவர்கள் கல்வி கற்கா விட்டாலும் சுயமாய் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.

ஆனால் குமுதம் எடிட்டோரியல் டீமோ கல்வி கற்றிருந்தாலும் சுயமாய் சிந்திக்கத் தெரியாத கூமுட்டைகள்.

ஜெ.அறிக்கை

ரஜினி கடிதம்

மேனகா காந்தி கடிதம்

நடிகர் ரஜினி,மேனகா காந்திக்கு ஜெ.நன்றி


No comments: