Monday 21 July 2014

வினை விதைத்த மு.க.ஸ்டாலின் ;அறுவடை செய்த உதயநிதி..!


குமுதம் நிறுவனத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக எழுந்த பஞ்சாயத்தில் குமுதம் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் இயக்குனர் வரதராஜனுக்கும் நடந்த மோதல் தொடர்பாகவும் அதில் நீதிக்குப் புறம்பாக வரதராஜனுக்கு அப்பொழுதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ததனால் வரதராஜன் தப்பித்து விட்டது குறித்தும் ஒரு பதிவினை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

அந்தப்பதிவிலியே கருணாநிதி மீது கடும் வன்மத்துடன் செய்தி வெளியிடும் 'குமுதம் ரிப்போர்ட்டர்' மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பதையும் எழுதி இது எத்தனை நாளைக்கு என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தோம். யாரையும் பயன்படுத்தி தூக்கி எறியும் குணம் கொண்ட வரதராஜன் ஸ்டாலினுக்கும் அதைச் செய்ய நீண்ட நாள் ஆகாது என்பது தெரிந்ததனால் தான் அதை எழுதினோம்.அதற்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.

'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன் தன் சுயரூபத்தைக் காட்டி இருக்கிறார்.




இது போன வாரம் குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படக் கட்டுரை. மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும்,நடிகை ஒருவருக்கும் 'காதல்' (!)என்றும் அதன் எதிரொலியாய் உதயநிதி தற்கொலை முயற்சி என்றும் செய்தி.இதன் நம்ப‌கத்தன்மை குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை.அது உண்மையோ பொய்யோ அது குறித்தும் இப்பொழுது பேசப்பட வேண்டிய அவசியமில்லை.

( இந்த உதயநிதி தான் தி.மு.க. கட்சிப் பத்திரிகையான‌ முரசொலி நாளிதழின் பொறுப்பு நிர்வாகி என்பதும் அவருக்கு மாதமாதம் லட்சத்தில் சம்பளம் என்பதும் உபரித்தகவல்.அவர் முரசொலியை கண்ணிலாவது பார்ப்பாரா என்பதும் சந்தேகமே..)

ஆனால் இப்பொழுது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும், எதைச் செய்தாலாவது ஆளுங்கட்சியின் ஆசிர்வாதத்தை பெற்றுவிடத் துடிக்கும் வரதராஜன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை தான் விமர்சிக்காமல் இருந்த மு.க.ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை அறியலாம். இது நாம் ஏற்கனவே அறிந்தது தான்.
---

மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு அரசியல் சூத்திரமே இன்னும் புரிபடாது இருக்கும் பொழுது பத்திரிகைத்துறை அரிச்சுவடி பற்றி இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் எதுவும் புரியாது.

குமுதம் பிரச்சனை என்னவென்று அறியாமல்,எவனோ ஒரு அரசியல் புரோக்கர் ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் எதையும் விசாரிக்காமல் அந்தப்பிரச்சனையில் ஒருதரப்பு ஆதரவு என்பதில் வெளிப்படுவது சுயநலம் மட்டுமல்ல,திறமையின்மையும் கூடத்தான்.





குமுதம் பிரச்சனையில் தலையிட்ட பின்பு  அதற்கான பிரதிபலன்களில் ஒன்றாக‌ தனது மனைவியை எழுத வைத்து 'தளபதியும் நானும்' என்னும் தொடரை குமுதம் சிநேகிதியில் வெளியிட வைத்து புளகாங்கிதம் அடைந்தார்.நான்கு மாதங்களுக்கு மேல் வெளியிடத் தகுதி இல்லாத அத் தொடரும் நான்கு வருடங்களுக்கும் மேலாக இன்னும் சவ்வாக இழுக்கடிக்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர்,கருணாநிதியையும் குஷ்பூவையும் இணைத்து அட்டைப்படக் கட்டுரையை வெளியிட வைத்து மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டனர். இன்றோ அதே குமுதம் ரிப்போர்ட்டரில்,நடிகையை இணைத்து அவரது பிள்ளைக்கு கவர் ஸ்டோரி.  அடுத்து ஸ்டாலின் குடும்பத்தில் யாருக்கு என்று காத்திருப்போம்.

(இந்த கவர் ஸ்டோரியில் ஸ்டாலின் குடும்பத்து உள்குத்து எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதே நேரம் மகனைப் பற்றி இழிவு படுத்தி கவர்ஸ்டோரி வெளியிட்ட பத்திரிகை குழுமத்தில் அம்மா துர்கா ஸ்டாலின் தனது தொடரை முழு மூச்சுடன் தொடர்கிறார். நல்ல குடும்பமய்யா..)

எப்படியானாலும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு இது தேவை தான்.
---

இன்னொரு புறத்தில் இது குமுதம் ரிப்போர்ட்டர் வரதராஜன் போன்றவர்களின் சுயரூபத்தைக் காட்டுவதாய் எடுத்துக் கொள்ள‌லாம்.தன்னைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செலல்வும்,திரும்ப அதற்கு எதிர் நிலை எடுக்கவும் தயாராவார் என்பதற்கு இது நல்ல உதாரண‌ம்.

நேற்று த‌னது சுயநலனுக்காய் மு.க.ஸ்டாலின் ஆதரவு நிலை எடுத்தவர் இன்று ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்துள்ளார். இது எத்தனை காலத்துக்கோ..?

(குமுதம் குழுமத்தில் கோசல்ராம் ஓரங்கட்டப்பட்டு பிரியா கல்யாணராமன் கை ஓங்கியிருப்பதாய்ச் சொல்றாங்களே..?உண்மையா அண்ணாச்சி..! )

2 comments:

Anonymous said...

Good article... Regarding kumudam-snegidhi, it seems apart form kumudam & Kumudam reporter all other kumudam's magazines (including snegidhi) is owned by palaniappan...

truth alone triumphs said...

face book la naan rasicha ore seydhi idhudhaan.keep it . STALIN ORU MATTAAL ENBADHAI NAAN ARIVEN. AVAR KUDUMBAM THALAIVAR PEYAR KEDUPPADHUM UNMAI