Monday 19 May 2014

'நடுநிலை' நரியின் சாயம் வெளுத்தது...!



ரேந்திர மோடி பிரதமராக நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் மோடி அலையை உருவாக்கின என்றால் தமிழ்நாட்டிலும் அத்தகையை அலையை பல ஊடகங்கள் திட்டமிட்டு உருவாக்கின.ஆனால் அங்கு மோடி சார்ந்த பாரதீய ஜனதாக்கட்சி வெற்றி பெற்ற‌தால் அந்த அலை உருவாக்கப்பட்டதா அல்லது அலை என்ற‌ ஒன்று இருந்ததா என்ற கேள்வியே தேர்தலுக்குப் பின் பெரிய அளவில் எழவில்லை.ஆனால் தமிழ்நாட்டிலோ மோடியும் அவரது பங்களாளிகளும் தேறவில்லை என்பதால் இங்குள்ள ஊடகங்கள் அம்பலப்பட்டுப் போய் நிற்கின்றன.

அப்படி அம்பலப்ப‌ட்ட ஊடகங்களில் 'புதிய தலைமுறை', 'தந்தி டிவி','தினமலர்','குமுதம்' ம‌ற்றும் 'ஜூனியர் விகடன்' ஆகியவை.இதில் புதிய தலைமுறை முதலாளி மோடியின் கூட்டணியில் அங்கம் வகித்ததனால் அதன் நடுநிலைமைத்தன்மை  முடிந்து போன ஒன்று.தினமலர் எப்பொழுதும் இந்துத்துவத்திற்கு குடை பிடிக்கும் ஒன்று.

ஆனால் இதுவரை பல விமர்சனங்கள் இருந்தாலும் இருக்கிற ஊடகஙகளில் ஜூ.வி.தன்னை 'நடுநிலைமை'யாக பொதுவெளியில் திட்டமிட்டுக் காட்டி வந்திருக்கிறது.அதற்குள் அடிநாதமாய் எப்பொழுதும் மறைந்திருக்கும் இந்துத்துவம் வெளிப்படையாய் அனைவருக்கும் தெரிந்ததில்லை.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு ஜூனியர் விகடனின் ஒவ்வொரு பகுதியிலும் திட்டமிட்டு மோடியை ஆட்சிக்கு வரவைப்பதற்காய் செய்திகள் வெளியிடப்பட்டன.தமிழ்நாடு முழுவதும் மோடியின் செல்வாக்கு கொடிகட்டிப் பறப்பதைப் போலவும் தேர்தல் முடிவுகளில் அது வெளிப்படும் எனவும் வரிந்து கட்டி எழுதினர். 'எனது இந்தியா' தொடரில் தொடங்கி,'கழுகார் பதில்கள்' வரை அனைத்திலும் இது எதிரொலித்தது.

ஆறு மாதங்கள்.எத்தனை எத்தனை ஆதரவுச் செய்திகள்,எதிர்த்தரப்பு கூட்டணி மீது எதிர்மறைச் செய்திகள்,பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியை உருவாக்க வலிந்து செயல்பட்ட முயற்சிகள்,இந்தக்கூட்டணி தான் ஜெயிக்கும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கணிப்புகள் என எந்த வகையிலும் நியாயப்ப‌டுத்த முடியாதவற்றை ஜூவி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மோடி ஜெயிப்பார் என்று எட்டு சர்வேக்களை ஜூவி வெளியிட்டுள்ள‌து. மேலும் அவை அனைத்தையும் தொகுத்து இறுதிக்கட்டமாய் மோடி பிரதமராக தமிழ்நாட்டில் அதிக ஆதரவு (28 விழுக்காடு,அதிமுக வுக்கு 26 விழுக்காடும் திமுகவுக்கு 17 விழுக்காடும் என்றும் எழுதியது.) என்றும், இது போக தொகுதி வாரியாய் கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட‌து.இவை அனைத்தும் இன்று அம்பலப்பட்டு விட்டது.ஜூவி வெளியிட்ட கணிப்புகள் அனைத்தும் தவறு என்று தேர்தல் முடிவுகள் நிருபித்துள்ளன.

நாம் ஜூ.வி. இறுதியாக வெளியிட்ட இரண்டு கணிப்புகளை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு இந்தப்பதிவை வெளியிட்டுள்ளோம்.

இனி ஜூவி வெளியிட்ட கணிப்பு முடிவுகளை தேர்தல் முடிவுகளுடன் நாம் அலசி ஆராய்வோம்.



ஜூனியர் விகடனின் கருத்துக் கணிப்புகளின் படி நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்திய,பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 28.75 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் மொத்தம் 18 விழுக்காடு (பா.ஜ.க.5.5+தே.மு.தி.க.5.1+பா.ம.க.4.4+ம.தி.மு.க.3.5) வாக்குகள் தான் கிடைத்திருக்கிற‌து.


ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவால் எந்தக் காரண‌மும் சொல்லி நிரப்ப முடியாத மிகப்பெரிய இடைவெளி இது. இப்படியா கேவலமாக அம்பலப்பட்டு அசிங்கப்பட வேண்டும்..?

னி தொகுதி வாரியாக ஜூனியர் விகடன் வெளியிட்ட‌ கருத்துக் கணிப்பு முடிவுகளை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.




*** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 





*** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 



**ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு.




*ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




*  ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 





ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




*ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



**ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 




** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 




ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.





*ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 




ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




                                               ***  ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 



 *** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 




* ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.





  *** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 

 


 ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




 ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




 ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




 *** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 






ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.





*** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 




ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



*** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு சரி. 





 ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 




** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 




ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 




ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.





ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.




ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பு தவறு.



** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 



** ஒப்பீடு-ஜூ.வி.கணிப்பில் ஒரு பகுதி தவறு. 



 ஜூனியர் விகடன் கணிப்பின் படி அதிமுக வுக்கு 15 நாடாளுமன்றத் தொகுதிகளும்,திமுகவுக்கு 14 நாடாளுமன்றத் தொகுதிகளும்,பாஜக கூட்டணிக்கு 11 நாடாளுமன்றத் தொகுதிகளும் கிடைக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு 37 தொகுதிகள் கிடைத்துள்ளன.பாஜக அணிக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் 8 தொகுதி முடிவுகள்  (திருவள்ளூர்,வடசென்னை,மயிலாடுதுறை,கடலூர்,திருப்பூர்,நாமக்கல்,திருச்சி,நீலகிரி ஆகியவை) தான் மிகச்சரியாக இருக்கிறது.மீதமுள்ள 32 தொகுதி முடிவுகளும் பகுதி பிழையும் முழுக்க தவறுமாய் இருக்கிறது.

அதிலும் முதலிடம் பிடிப்பார்கள் என ஜூனியர் விகடன் கணித்துச் சொன்ன ஆரணி,அரக்கோணம்,தூத்துக்குடி ஆகிய 3 தொகுதி வேட்பாளர்கள் மூன்றாமிடம் தான் பிடித்துள்ளனர்.

மூன்றாமிடம் தான் இவர்களுக்கு கிடைக்கும் என ஜூனியர் விகடன் கணித்த அதிமுகவின் வேலூர்,தென்காசி,விருதுநகர்,தூத்துக்குடி,சேலம்,பெரம்பலூர்,சிதம்பரம் ஆகிய 7 தொகுதி வேட்பாளர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் தேனி பாராளுமன்றத் தொகுதியில் 4 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.அதே போல் ஜூ.வி. கணிப்பில் மூன்றாவது இடம் பிடித்த சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நான்காவது இடம் பிடித்து டெபாசிட் இழந்துள்ளார்.

அதிலும் ஜூனியர் விகடன் அலுவலகம் அமைந்துள்ள மத்திய சென்னை தொகுதி முடிவையே  தவறாய்க் கணித்திருக்கிறது.

இந்த லட்சணத்தில்,ஜூவி தமிழ்நாட்டில் வெளியிட்ட கணிப்பு போதாது என்று  கேரளாவிலும் கருத்துக் கணிப்பைச் சொன்னது.(கழுகார் பதில்கள்)அவ்வளவு விசுவாசம்.

கேர‌ளாவில்,பாரதிய ஜனதா இந்த தேர்தலில் திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றியைத் தழுவும் என ஜூவி சொன்ன இரண்டு தொகுதியிலும் இந்த முறை தோல்வி தான் அதற்கு கிடைத்திருக்கிறது.

ஆனால் வாசகர்களுக்கு இவ்வளவு தவறான செய்திகளையும்,மோசடியாக பல கருத்து கணிப்பையும் தொடர்ச்சியாய் வெளியிட்டிருக்கிறோம் என்று ஜூனியர் விகடன் எந்த வருத்தத்தையோ,மன்னிப்பையோ கடந்த இதழில் தெரிவிக்கவில்லை,இனியும் தெரிவிக்காது என்பதை நாம் அறிவோம். இவர்கள் தான் அடுத்தவனின் தவறுகளை விமர்சிக்கும் தகுதியும் வல்லமையும் படைத்தவர்களாய்த் தங்களைக் கருதிக்கொண்டு நடப்பவர்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை.

ஊடகங்கள் அளிக்கும் செய்திகள் உண்மையாய் இருக்கும் என்று நம்பி வாங்கும் வாசகனை பட்டவர்த்தனமாய் ஏமாற்றுவது எவ்வளவு பெரிய மோசடி..? இந்த ஊடகங்கள் தான் அவன் சரியில்லை,இவன் சரியில்லை என கூசாமல் கை நீட்டி குற்றம் சாட்டுகிறார்கள்.

( இனி இதனைச் சரிக்கட்ட மோடிக்கு எதிரான அறிவுஜீவிகளின் பேட்டி, அவர்களின் கட்டுரைகள்,பொதுவுடைமை,திராவிட இயக்கங்கள் தொடர்புடைய செய்திப்பதிவுகளை வழக்கத்தை விட‌ சற்று அதிகம் எதிர்பார்க்கலாம்.)

துவரை ஜூனியர் விகடன் அணிந்த 'நடுநிலை' முகமூடிக்கும் அதன் இப்பொழுதைய வெளிப்படையான‌ இந்துத்துவ பிரச்சாரத்திற்கும் என்ன காரணம்.? தான் வெளியிடும் கணிப்பு முடிவுக‌ள் நடைமுறை சாத்தியம் இல்லாதவை,தேர்தலுக்குப் பின் தனது  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் எனத் தெரிந்தும் இப்படி ஒரு நிலை எடுக்க என்ன காரணம்..?

இதற்கு முன்பு ஜூனியர் விகடன் எடுத்த கணிப்புகளும் பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன.ஆனால் அதில் மனித தவறுகளும் திறமையின்மையும்  தான் அதிகம் இருப்பதாக கருதுகிறோம்.இம்முறையின் கணிப்புகளுக்கு பின்னணியில் 'லாபி'யும் 'கைம்மாறு'ம் இருப்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.

ஜூவி. ஆசிரியரால் அதிக பட்சம் வைகோவுக்கு ஆதரவாய் நான்கு செய்திகள் போட முடியுமே தவிர,வைகோ ஜெயிப்பது கடினம் என ஏரியா ரிப்போர்ட்டர் எழுதி அனுப்பினால்,வைகோ ஜெயிப்பார் என மாற்றி கணிப்பினை வெளியிட முடியுமே தவிர,மோடிக்கு ஆதரவான‌ இவ்வளவு பெரிய பரப்புரையை வலிந்து செய்து விட முடியாது.

ஆகவே ஜூவி உருவாக்கிய மோடி மாயைக்கு அதன் முதலாளியே காரணம்.அவரின் திட்டத்தை அவரின் சம்பளக்காரர்கள் எட்டு கால் பாய்ச்சலில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன் விகடன் அதிபர் சீனிவாசன் (பைல் படம்)

மேற்கண்ட அனைத்தும் அதன் முதலாளியின் விருப்பத்தையும் உத்தரவையும் மீறி நடக்கத் துளியும் வாய்ப்பில்லை.எந்த ஒரு வணிக நிறுவனத்தை வழிநடத்தும் முதலாளியும் லாப நோக்கின்றி பிரதிபலன் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை.

ஜூவி சீனிவாசன் அடைந்த ஆதாயம் அல்லது அடையப்போவது என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.

இது தான் ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பின் யோக்கிய‌தை.'ஜூனியர் விகடன் தமிழ் மக்களின் நாடித்துடிப்பல்ல'.

ஊடகத்தின் வெட்கக் கேடு.

இதர ஊடகங்களின் மோசடிக் கருத்துக் கணிப்புகள் அடுத்த பதிவுகளில்

தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.vinavu.com/2014/04/01/junior-vikatan-campaigns-for-modi/

http://kalakakkural.blogspot.in/2014/05/blog-post.html

http://kalakakkural.blogspot.in/2014/04/blog-post_20.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_23.html

No comments: