Thursday 26 January 2012

பச்சைக் கலரு சிங்குச்சா! மஞ்சக்கலரு சிங்குச்சா! விகடன் கல்லாப் பெட்டி நிறைஞ்சுச்சா?



          கருணாநிதியிடம் வளைந்தும் வழிந்தும் நிற்கும் விகடன் அதிபர் பா.சீனிவாசன்.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே !
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே !

என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ விகடன் தாத்தாவுக்கு நன்கு பொருந்தும்.

விகடன் குழுமத்தின் ஜுனியர் விகடனும் ஆனந்த விகடனும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் திமுக தலைவர் கருணாநிதியையும் நடுநிலையுடன் விமர்சித்திருக்கிறது.

அப்பொழுது நாமும் நல்லாத் தான்யா விமர்சிக்கிறார்கள் என்று கூறியும்,மேலும் இருக்கிற பத்திரிகைகளில் இதுதான்  ஓரளவுக்கு நடுநிலை(!) என்றும்,மேலும் மத்ததுக்கு இது பரவாயில்லை என்றும் நம்பினோம்.அதனால் வாரத்துக்கு 3 முறை அவர்களின் இதழ்களைக் காசினைக் கொடுத்து வாங்கினோம்.

இதன் விளைவாய் அவர்களின் சர்க்குலேஷனும் எக்குத்தப்பாக கிட்டத்தட்ட 5 லட்சம் காப்பி அளவுக்கு(சட்டமன்றத் தேர்தலின் பொழுது) உயர்ந்தது.இதன் காரணமாய் சந்தையில் அசைக்க முடியாத அளவுக்கு விகடன் குழும இதழ்கள் இடத்தைப் பிடித்தன.

நாம் விகடன் குழும இதழ்கள் தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று அப்பாவியாய் நம்பிக் கொண்டிருக்க அவர்களோ எங்களுக்கு இது பிழைப்பு மட்டும் என்று தொடர்ந்து சொல்லாமல் சொல்லி வந்துள்ளார்கள்.ஆனால் இந்த முறை கொஞ்சம் பட்டவர்த்தனமாய் பிழைப்புவாதம் என்று அவர்களே அம்பலப்பட்டுள்ளார்கள்.

ஆம் விகடன் பிரசுரத்தின் சார்பில் சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா,திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து இரண்டு நூல்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.இருவரது அபூர்வ புகைப்படத் தொகுப்புகள் என்று வெளிவந்துள்ளது.

மற்ற துறைகளைப் போல் பதிப்பகத்துறையும் பிழைப்பு என்று ஆகிப்போன பின் இது ஒன்றும் தவறில்லை.ஆனால் நான்காம் தூண் என்று சொல்லிக் கொண்டும் நடுநிலைமை என்றும்,தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொண்டும் யாரை விமர்சிக்கிரோமோ அப்படி விமர்சித்து அதனைக் காசு பார்த்து விட்டு,அதே நேரத்தில் அவர்களையே வியந்தோதி அதனைப் போற்றிக் காசு பார்ப்பது என்பது பிழைப்பு அல்ல.பச்சையான பிழைப்புவாதம்.

இவர்கள் வெளியிட்ட நூலினைப்பார்த்தால் திமுக அதிமுக தொண்டன் கூட கூச்சத்தில் நெளியும் அளவுக்கு புகழ்ச்சிமயமாக உள்ளது.



முதலில் நூல்களின் தலைப்பினைப் பார்ப்போம்.

1)டாக்டர் கலைஞர் கருணாநிதி(பளபளக்கும் மஞ்சள் அட்டையில்)

2)புரட்சித்தலைவி ஜெயலலிதா(பளபளக்கும் பச்சை அட்டையில்)

விகடன் குழும இதழ்கள் தன்னுடைய இதழ்களில் எண்ணற்ற முறை,புரட்சித்தலைவி என்ற சொல்லாடலுக்கும்,டாக்டர் கலைஞர் என்ற சொல்லாடலுக்கும்,கடுமையாய் விமர்சித்திருக்கிறது.(நாமும் என்னாமாய் நடுநிலையாய் விமர்சிக்கிறார்கள் என்று ஏமாந்திருக்கிறோம்)

திமுக தலைவர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்ததை எத்தனையோ முறை நையாண்டி செய்துள்ளது!அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சித்தலைவிக்குப் பிடித்தது என்று பச்சை மேனியாவுடன் திரிந்த பொழுது எத்தனை கடுமையான விமர்சனங்களைச் செய்திருக்கும்?

ஆனால் இன்று பிழைப்புவாதம் என்று வந்த பிறகு அதிமுக திமுக தொண்டனே கூச்சத்தில் நெளியும் அளவுக்கு அட்டையில் பச்சையையும்,மஞ்சளையும் வைத்து பிரிண்ட் செய்து புரட்சித்தலைவி ,டாக்டர் கலைஞர் என்று வெளியிட்டு லேகியம் விற்பவனைப் போல கூவிக் கூவி விற்கிறது.நேசிக்கும் உள்ளங்கள் அனைத்தும் பூஜிக்க இரண்டு புத்தகங்கள் என்பது விளம்பர வாசகம்!


போதாக்குறைக்கு பிரபல்யங்களை வைத்து அப்பாவித் தொண்டர்களைக் குறிவைத்து ரொம்ப அருமையான புத்தகம் உடனே வாங்கிக்கோங்க,வாங்கலைன்னா ஜென்ம சாபல்யம் அடைய முடியாது என்கிற ரேஞ்சில் எழுத வைக்கிறது.நல்ல வேளை புத்தக அரங்கிற்குள் வருபவர்களுக்கு பச்சைக் கலர்,மஞ்சள் கலர் பெயிண்ட் அடிக்க வில்லை.

இது நேர்மையான பிழைப்பு அல்ல!பிழைப்புவாதம்!

விகடன் இப்படிச் செய்வது இது முதல்முறை அல்ல.இதற்கு முன்பும் இப்படி நடந்திருக்கிறது.4 ஆண்டுகளுக்கு முன் 2007 ஆம் ஆண்டு பிரிட்டானியா கன்சைஸ் என்சைக்ளோபீடியா என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினை விகடன் அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியை வைத்து வெளியிட்டது.

வெளியீட்டு விழாவில் மு.கருணாநிதி வழக்கம் போல தன்னைப் புகழ்ந்தவர்களைப் பதிலுக்குப் புகழ்ந்து விட்டு விழா மேடையிலேயே நூலக ஆணைக்குழுவின் விதிமுறைக்கு மாறாக,நூல்களை வாங்குவதற்கு அவர்கள் விலை நிர்ணயிக்கும் விதிக்கு மாறாக விகடன் பிரசுரம் நிர்ணயித்திருந்த மிக அதிகமான விலைக்கே வாங்க உத்தரவிட்டார்.



இணைப்பு-http://tamil.oneindia.in/news/2007/04/29/cm.html

சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் சுத்தமாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 
சென்னையில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனத்தின் பிரிட்டானியா கன்சைஸ் என்சைக்ளோபீடியா என்ற ஆங்கில தகவல் களஞ்சியத்தை விகடன் குழுமம் தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டுள்ளது.
இதை முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வெளியிட்டார். முதல் பிரதியை சக்தி குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி நிகழ்ச்சியில் பேசுகையில்தமிழ்க் குடும்பத்தில் ஒரு தகவல் களஞ்சியத்தை வெளியிடுகிறார்கள் என்றால் நான் ஆச்சரியப்படவில்லை. இவர்கள் வெளியிடாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். 
நான் விகடனை தாக்கிப் பேசுவதும்விகடன் என்னைத் தாக்கி எழுதுவதும் சகஜம். நான் அவர்களை விமர்ச்சித்திருக்கிறேன். இதற்கெல்லாம் அடிக்கடி நான் சொல்வதைப் போலஅண்ணா சொன்னதைப் போலமூத்த தலைவர்கள் சொல்வதைப் போல இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு அரசியல் நாகரீகம்பண்பாடு இருக்க வேண்டும். ஆனால் இப்போது அரசியல் நாகரீகம் இல்லை. 
சட்டசபையில் பேசும்போது நான் யார் யாருடன் அரசியல் நடத்தியுள்ளேன் என்று சொன்னேன். இந்திராகாந்திகாமராஜர்பக்தவத்சலம்எம்ஜிஆர் ஆகியோருடன் அரசியல் நடத்தியுள்ளேன். இப்போது என் கதி இப்படியா ஆகும் என கண் கலங்க நான் சொல்லமற்றவர்கள் அத்தனை பேரும் கண் கலங்கினார்கள். என்ன காரணம்அந்த பண்பாட்டை நாம் இழந்துவிட்டோம். 
இந்த விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். மூன்று புத்தகங்களின் விலை ரூ. ஆயிரம். ஏப்ரல் 30ம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ. ஆயிரம் என்ற அளவில் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளாம் என்று இதன் பதிப்பாளர் சீனவாசன் தெரிவித்தார். 
இதையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவிடமும்பொன்முடியிடமும் ஏப்ரல் 30 வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே நமக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். எத்தனை புத்தகம் வாங்க வேண்டும் என்று நீங்களே அறிவித்துவிடுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரி நூலகங்களில் வைப்பதற்காக 500 படிகள்அதாவது 500 காப்பிகள். மூன்று நூல்கள் சேர்ந்தது ஒரு படி. பள்ளிக் கல்விக் துறை சார்பில் பொது நூலகங்களில் வைப்பதற்காக 1000 படிகள் வாங்கப்படும்.
1500 புத்தக படிகள் அதாவது மொத்தம் 4500 புத்தகங்கள் தமிழக அரசு சார்பில் வாங்கப்படும் என்று தெரிவித்து உடனே நடைமுறைக்கு வரும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகங்கள் நாளைக்கே வாங்கப்படும் என்றார் கருணாநிதி.

  •  

மேடையிலேயே  நூலக ஆணைகளும் விதிமுறைகளும் மீறப்பட்டதை விகடன் குறை காணவில்லை.செய்தி வெளியிடவிலை.எங்களுக்காக விதிமுறைகளைத் தளர்த்த வேண்டாம்,நாங்கள் நூலக் விதிமுறைப்படி நடக்கிறோம்.அந்த விலைகே விற்கிறோம். என்று மறுக்கவில்லை.மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது.புகைப்படத்தில் விகடன் அதிபர்  பா.சீனிவாசன் முகத்தினைப் பார்த்தால் இது தெரியும்.

(கருணாநிதியை அடுத்த சில மாதங்களில் ஜுனியர் விகடன் கடுமையாக விமர்சனம் செய்த பொழுது மறைந்த சின்னக் குத்தூசி, இதனைச் சுட்டிக்காட்டினார்.பிழைப்பிற்காக விகடன் சினிவாசன் அய்யர் கருணாநிதியை வைத்து நூலினை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்து விட்டு இன்று காரியம் முடிந்ததும் திட்டுகிறார் என்று முரசொலியில் பெரிய பத்தியாக எழுதி உள்ளார்.)

அப்படிப்பட்ட விகடன் பிரசுரம் இன்று டாக்டர் கலைஞர் கருணாநிதி,புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று பிழைப்பிற்காக வெளியிடுகிறது.டாக்டர் கலைஞர் கருணாநிதி புத்தகத்தினை திமுக தொண்டன் தலையில் கட்டி விடலாம்.புரட்சித்தலைவி ஜெயலலிதா நூலினை அதிமுக தொண்டன் தலையிலும்,ஆட்சியில் இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களிலும் விற்றுவிடலாம்.

பிழைப்புவாதத்தில் மூழ்கியுள்ள இவர்களை ஒப்பிடும் பொழுது தன் தலைவனை டாக்டர் கலைஞர் என்றும்,புரட்சித்தலைவி என்றும் அழைக்கும் தொண்டன் கோடி மடங்கு மேலானவன்.

நல்லாத் தான் பிழைக்கிறாங்கய்யா!

Monday 23 January 2012

வரதராஜா சாமியோவ் இம்புட்டு நல்லவரா நீங்க!





குமுதம் குழுமத்தின் சார்பில் தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்ய இருப்பதாகவும் அதற்காக வாசகர்களிடமிருந்து நன்கொடை திரட்டித் தமிழக அரசிடம் அளிக்க இருப்பதாகவும் குமுதம் குழும இதழ்களில் நாமே கொடுப்போம் என்னும் பெயரில் அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார் பா.வரதராஜன்.

இதுவரை சமூக நலன்சார்ந்த எந்த விஷயங்களிலும் அக்கறை காட்டாத வரதராஜன் இப்பொழுது முதன் முதலாக ’ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுக்” களத்தில் இறங்கியுள்ளார்.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?

இதன் உள் நோக்கம் இதன் வாயிலாகத் தமிழக முதல்வரைச் சந்தித்து அதனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு குமுதம் குழும இதழ்களில் வெளியிட்டுத் தனக்குத தமிழக முதல்வரிடத்தில் மிகுந்த செல்வாக்கு இருப்பதைப் போல ஒரு பிம்பத்தை வெளி உலகுக்குக் காட்டுவதுடன் குமுதத்தின் உண்மையான உரிமையாளர் ஜவகர் பழனியப்பனை அச்சுறுத்துவதற்கும் அதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் குமுதத்தை ஆட்டையப் போட்ட வரதராஜன்.

இதன் மூலம் வாசகர்கள் பணத்தில் வள்ளலாகக் காட்டிக் கொள்ள இன்னொரு மோசடிக்கு அடிப்போட்டுள்ளார்.

ஏற்கனவே சுனாமி பேரழிவு வந்தாலும் வந்தது.அதனால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னும் நிர்க்கதியாய் இருக்கிறார்கள்.ஆனால் ஒரு சிலர் அவர்களின் பெயரைச் சொல்லி வசூலித்துக் கார்,பங்களா வங்கியில் டெபாசிட் அப்படின்னு வசதியாய் ஆகிட்டாங்க.

ஆனால் வரதராஜன்,பல கோடி மோசடி செய்தார் என்று சென்னை மாநகரக் காவல் துறையின் மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு,இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் (குற்ற எண் 196/2010) அந்த வரதராஜன் தானே சீரழிவைக் காரணம் காட்டி இப்பொழுது வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார்.


                 விசாரணைக்கு காவதுறை ஆணையாளர் அலுவலகம் வரும் வரதராஜன்.




இவரது நல்லெண்ணத்தை நாம் பாராட்டலாம்.சுனாமி பணத்தை சிலர் மோசடி செய்தது போல,குமுதம் முதலாளி எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் சொத்தினைச் சிலர் மோசடி செய்ததைப் போல அப்பாவி வாசகர்களின் பணத்தை இவர் மோசடி செய்ய மாட்டார் என நாம் நம்புவோம்.

ஆனாலும் எச்சரிக்கையுடன் இருங்கள் வாசகர்களே!

நாமே கொடுப்போம்ன்னு சொல்லியிருக்கார் வரதராஜன்.
குமுதத்தை ஆட்டையப் போட்ட சாமியோவ் எஸ்.ஏ.பி.அண்ணாமலை சொத்தினை அவரது வாரிசுகளுக்கு நாமே கொடுத்துடலாமே சாமி!!
வாசகர்களுக்கு நீ நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்க சாமி,
இந்த விஷயத்தில் உன்னையும் சேர்த்துக்க சாமி!அடுத்தவங்க சொத்தினை ஆட்டையப் போடுவது இதில் சேராதா சாமியோவ்!



விளை நிலங்களைக் காங்கிரீட் வளங்களாக மாற்றினோம் ன்னு நல்லாத் தான் டயலாக் விடுறீங்க சாமியோவ்!ஆனா நீ பண்ற ரியல் எஸ்டேட் பிசினஸ் மட்டும் காங்கிரிட் வனமா இல்லாம விளை நிலமாவா மாறுது சாமி?

சொல்லுக்கும் செயலுக்கும் எந்தச் ச்ம்பந்தமும் இல்லாத நீ நல்லாத் தான் தத்துவம் பேசுற சாமி!

இயற்கையை நாம் வஞ்சித்தோம்.இயற்கை நம்மை வஞ்சிக்கிறது

என்னமோ நல்லாத் தான் சொல்றீங்க சாமி.தமிழ்ல இதை ஒட்டி ஒரு சொலவடை இருக்கு சாமி!தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் அப்படின்னு.

உனக்கு கண்டிப்பா அது பலிக்கும் சாமி!அது வரைக்கும் சந்தோஷமா இருங்க சாமியோவ்.


Sunday 22 January 2012

கையில காசு காலையில் நியூசு-ஹிந்து ராமின் ஆத்மார்த்த ஸ்லோகம்

காசுக்குச் செய்தி-ஊழலில் திளைக்கும் ஊடகங்கள்



நம் நாட்டில் ஊடகங்கள் தற்பொழுது கொள்ளையர்களின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.எந்த அர்ப்பணிப்பும் இல்லாத பத்திரிகைத் துறையைப் பற்றி ஒன்றும் தெரியாத,ஒரு சில பண முதலைகளிடம் மிரட்டிப் பணம் பறிப்பதற்கெனவே தொடங்கப்பட்ட வாரமிருமுறை, வார,மாதமிருமுறை,மாத இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் புற்றீசலைப் போல் நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது.

கள்ளச் சாராயம் காய்ச்சுபவன்,சந்தனக் கடத்தல்,கள்ள நோட்டு அச்சடிப்பவன்,விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டவன்,சுயநிதிக் கல்லூரி நடத்தி நாட்டைச் சுரண்டியவன் எல்லாம் இன்று பத்திரிகையாளனாகவும்,உரிமையாளனாகவும் அவதாரம் எடுத்துள்ளனர்.

இதனால் தியாகம்,அர்ப்பணிப்பு லட்சியம் கொள்கை என்று பத்திரிகைத் தொழில் மட்டுமே வாழ்க்கையாக இருந்து வரும் பத்திரிகையாளர்களின் மதிப்பு மரியாதை முற்றிலுமாய் அழிந்துள்ளது.

அரசியல்வாதி உயர் அதிகாரிகள் அரசு ழியர்கள் செய்யும் ஊழலைப்பற்றி எழுதும் பத்திரிகைகள் மற்றும் அதில் பணியாற்றும் பத்திரிகையார்கள் செய்யும் ஊழலைப்பற்றி எழுதினால் இதற்காகவே ஒரு நாளிதழ்,நாலு வார இருமுறை தழ்களைக் கூட நடத்தலாம்.

ஆரம்ப கால கட்டத்தில் சம்பளத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் இன விடுதலைக்காய்,நாட்டு விடுதலைக்காய்ப் போராடிய லட்சியவாதிகளைக் கொண்டே பத்திரிகை நிறுவனங்களும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் உழைத்து வந்தனர்.

நாளடைவில் த்துறையில் பண முதலைகள் களம் இறங்கினர்.முதலீடு செய்பவன் பத்திரிகையின் ஆசிரியன் என்ற இழிநிலை நாடு விடுதலை அடைந்த பிறகே உருவானது.

இப்பொழுது நிலையே தலைகீழாக மாறிவிட்டது.தற்பொழுது தேசிய அளவில் காசுக்குச் செய்தி வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை ஆங்கிலத்தில் paid news என்று அழைக்கிறார்கள்.



காசுக்குச் செய்தி என்னும் கழிசடைக் கலாச்சாரம் முதன் முதலில் தொழில் நிறுவனங்ளின் விம்பரம் பெற்று அந்த நிறுவனங்ளால் உற்பத்தி செய்யும் பொருட்கள் எப்படியிருப்பினும் அது குறித்து உயர்வாக எழுதுவதே என்ற நிலையாக இருந்தது.

இதன்படி பெரும்பாலான் பத்திரிகைகள் விளம்பரம் என்ற பெயரில் காசு பெற்றுக் கொண்டு தரம் குறைந்த பொருட்களை எல்லாம் தரமானவை என்று எழுதி வந்தனர்.இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தனிநபர்கள் கொடுக்கும் விம்பரம் பெற்றுக்கொண்டு கொடுத் நபர் சமூக விரோதியாக இருந்தாலும் அவனை வள்ளல்,கொடைவள்ளல்,தர்மசீன் உத்த்ம புத்திரன் உலக ரட்சகன் என்று துதிபாடி எழுதத் தொடங்கினர்.மோசடி நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் பெற்று அந் நிறுவனங்களை உயர்வாக எழுதினர்.

பத்திரிகைகளில் இப்படிப்பட்ட செய்தியைக் கண்டு ஏமாந்த பொது மக்கள் அந்நிறுவனங்ளில் முதலீடு செய்து ஏமாந்த கதை ஏராளம் ஏராளம்.ஆனால் இதில் ஏமாந்தது அப்பாவி மக்கள் மட்டுமே.



மோசடி நிறுவனங்ள் இந்த அப்பாவி மக்களின் பணத்தைச் சுருட்டி ஓடி விடுவதும் அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட விம்பரங்களால் கொழுத்த பத்திரிகை நிறுவனங்ள் ஏராளம் இதில் துளியும் பாதிக்கப்படவில்லை..மக்கள் ஏமாறக் காரணமான விளம்பரத்தை வெளியிட்ட பத்திரிகை நிறுவனங்கள் இதுவரை எந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட்டதில்லை.வருங்காங்களில் மோசடி நிறுவனங்களால் விளம்பரமாக  கொடுக்கும் தொகையை அந்தந்த  பத்திரிக்கை நிறுவனங்களிடமிருந்து வசூலித்து மாந்தவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.அப்பொழுது தான் மோசடிப்பேர்வழிகள் கொடுக்கும் விளம்பரங்களைப் போட இந்த நிறுவனங்ள் யோசிக்கும்.அதே போல் ஊழல் அரசியல்வாதிகள் கொடுக்கும் விம்பரங்களுக்கான தொகைகளையும் திரும்பப்பெற சட்டம் கொண்டுவர வேண்டும்.இப்படி ஊழலில் திளைக்கும் ஊடகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் வினோத ஊழல்கள் பலவகைகள்.

ஊடகங்கள் தொடங்கப்பட்ட ஆரம்ப கால கட்டங்களில் அந் நிறுவனங்ளில் வேலை செய்யும் செய்தியாளர்களுக்கு குறைந்த தியம் வழங்கப்பட்டு வந்தது.இதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் பெரும் முதலீடுகளைச் செய்து யாரும் பத்திரிகை நிறுவனங்ளை ஆரம்பிக்கவில்லை.நாட்டின் விடுதலைககாகவும்,இன விடுதலைக்காகவும்  மாநிலக் கட்சிகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவுமே பத்திரிகைகளை நடத்தி வந்தனர்.இதனால் சேவை மனப்பான்மையில் அன்றைய ஊகவியலாளர்கள் தாங்கள் கொண்ட கொள்கையின் காரணமாகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றி வந்தார்கள்.அப்பொழுது அந்த ஊழியர்களுக்கு கொள்கையும் லட்சியமுமே பிரதானமாக இருந்தது.தியம் இரண்டாம் பட்சமாய் இருந்து.

இதனால் அக்கட்சியைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கட்சி சார்ந்த ஊடக் நிருபர்களுக்கு செலவுக்கு வைத்துக் கொள் என்று ஏதோ ஒரு தொகையைக் கையில் கொடுப்பார்கள்.நாளடைவில் இதுவே கவர் கலாச்சாரமாக கொஞ்சமாக வளர்ந்து இன்று ஆலவிருட்சம் போல் வளர்ந்துள்ளது. 

இன்றைய முதலாளிகள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் சூழலிலும் கொள்ளையோ லட்சியமோ இல்லாத ஊடகவியலாளர்களுக்கு போதிய  ஊதியம் வழங்கிய போதிலும் இந்த கவர் கலாச்சாரம் எல்லா ஊடகவியலாளர்கள் மத்தியிலும் பற்றிப் படந்துள்ளது.




தமிழக ஊடகத்துறையில் இந்தக் கலாச்சாரத்திற்கு அடிமையாகாதவர்கள் சுமார் 20 சதம் மட்டுமே இருப்பார்கள்.கடந்த சில ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றும் டகவியலாளர்கள் வாங்கும் கவரைப்போல் நிறுவனங்ளும் வாங்க ஆரம்பித்து விட்டது.ஒரு காலத்தில் விளம்பரங்களை மட்டும் வாங்கி வந்த நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்ளின் விளம்பரங்களை வெளியிட்டு,சம்பந்தப்பட்ட வர்த்த்க நிறுவங்களின் புகழைப்பாடத் தொடங்கினர்.

இங்கு தான் காசுக்குச் செய்தி என்ற கலாச்சாரம் தொடங்கியது.

இதன் பரிணாம வளர்ச்சியாக தற்பொழுது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களிடம் மட்டுமின்றி சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் வரை எல்லோரிடமும் ஒரு நாளைக்கு இத்தனை காலம் சென்டிமீட்டர் படமும் அதற்குரிய பிரச்சார செய்தியும் வெளியிடுகிறோம் என்று கூறி ஊடக நிறுவனங்கள் வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்று வருகின்றார்கள். விளம்பரம் போட்டு கட்டணம் வாங்குவது எல்லாம் பழசு.

அதற்குப் பதிலாக செய்தியைப் போட்டு அதற்காகக் காசு வாங்கி கல்லா கட்டுவதுதான் புது டிரெண்ட்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடங்கிய இந்தக் கலாச்சாரம் நாடாளுமன்றத் தேர்தல் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வரை வளர்ந்துள்ளது. ஊடக நிறுவனங்களின் இந்த அயோகியத்தனங்கள் இனி ஒவ்வொன்றாக இப்பகுதியில் வெளிவரும்.

எடுத்துக்காட்டாய் தி ஹிந்து ஆங்கில நாளிதழ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.



இப்படி செய்திக்குப் பணம் வாங்குவதைப் பற்றி அண்மைக்காலத்தில் அதிகமாகச் சாடிய து ”தி ஹிந்து’ ஆங்கில நாளிதழாகத்தான் இருக்க வேண்டும்.நேர்மையின் சிகரத்தில் நின்று கொண்டு அந்த நாளிதழ் கருத்துக்களையும் கட்டுரைகளையும்,தலையங்கங்களையும் தொடர்ச்சியாகத் தீட்டித் தள்ளியது.

உதாரணத்துக்கு தி ஹிந்து.காம்.ஒப்பினியன் பகுதியில் அண்மையில்,அக்டோபர் 10,2011 அன்று பி.சாய்நாத்  எழுதிய ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது.


http://www.thehindu.com/opinion/columns/sainath/article2523649.ece


அதன் சாராம்சம் வருமாறு.


”2010 ல் பத்திரிகையாளர் சங்கங்கள் கருத்தரங்கம்மாநாடு போன்றவை நடத்தினார்கள். அதில் வாய் கிழியப் பேசினார்கள்.


அதில் அவர்கள் விவாதித்த விஷயம் பற்றி எந்த நாளிதழிலும்,தொலைக்கட்சியிலும் செய்தி வரவே வராது. ஊழல் பற்றி வாய்கிழிய நிறைய பேசும் இவர்கள் ’பெய்டு நியூஸ்’ என்ற சமாச்சாரத்தைப் பற்றி மட்டும் செய்தி வெளியிட மாட்டார்கள். கவனமாக தணிக்கை செய்து விடுவார்கள்.


மகாராஷ்டிராவில் 2009 சட்டமன்றத்தேர்தலுக்கு சற்றுமுன் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெரிய நாளிதழ் குழுமம் ஒன்று புனேயில் ஒரு கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.


மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள். குறைந்தது 145 தொகுதிகளில் வெற்றிபெறுபவர்தான் ஆட்சியமைக்க முடியும்.ஒரு தொகுதிக்கு குறைந்தது 5 கோடி செலவு செய்தால் 145 தொகுதிகளுக்கு ரூ.725 கோடி தேவைப்படும். அவ்வளவு பணம் வைத்திருக்கும் கட்சி மட்டும் தான் மகாராஷ்டிராவில் வெற்றிபெற முடியும்.


தேர்தலுக்காக இவ்வளவு பணத்தை அள்ளிவிடப்போகும் இவர்களிடமிருந்து நாம் ஒரு பங்கு வாங்கினால் என்ன?என்று அந்த நாளிதழின் பைனான்ஸ் மேனேஜர்கள் கேட்டார்கள்.


விளம்பரம் போட்டு கட்டணம் வாங்குவதேல்லாம் பழைய விஷயம்.பேசாமல் செய்தி வெளியிட்டுப் போட்டு பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்தக் கூட்டத்தில் முடிவானது.


அந்த மகாராஷ்டிர நாளிதழ் குழுமம் ரொம்ப லேட்.ஏற்கனவெ அங்குள்ள வேறு சில நாளிதழ்கள் நாடாளுமன்றத் தேர்தலிலேயே இப்படி செய்தி போட்டு பணம் வாங்கும் டிரண்டைத் துவக்கி விட்டன.


பெய்டு நியூஸ்’ களில் போஸ்டு பெய்டு,பிரீ பெய்டு என்று பல ரகங்கள் இருக்கின்றன.பலதரப்பட்ட ’கட்டண விகிதங்களும்’ இருக்கின்றன.டீலக்ஸ் கட்டணவிகிதம் என்பது என்பது கோடிகளில்.சாதாரண கட்டண விகிதம் என்பது லட்சங்களில்.

அதிகாரம் வாய்ந்த மீடியா அமைப்புகள் 2009 தேர்தலில் பணக்காரக் கட்சிகள் பணக்கார வேட்பாளர்களிடம் இப்படி செய்திக்குப் பணம் வாங்கிக் குவித்தன.


இப்படி கட்டுரை வெளியிட்டிருந்தது தி ஹிந்து.

மகராஷ்டிர முதல்வர் அசோக் சவான்2009 சட்டமன்றத் தேர்தலில் ஏற்த்தாழ வெறும் 11000 ரூபாயைத்தான் நாளிதழ் விளம்பரங்களுக்காகச் செல்வழித்திருந்தார்.ஆனால் மகாராஷ்டிர டைம்ஸ்,லோக்மாத் போன்ற பத்திரிகைகள் பணம் பெற்றுக் கொண்டு அவருக்காக மாய்ந்து மாய்ந்து செய்தி வெளியிட்டன என்றும் ஹிந்து கூறியிருந்தது.


ஆக மொத்தத்தில் பெய்டு நியூஸ் வெளியிடுவதை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா கண்டித்து பெய்டு நியூஸ் என்றால் என்னவென்று வரையறுத்து பெய்டு நியூஸ் தொடர்பான சில பரிந்துரைகள்,புதிய வழிமுறைகளைக் கொண்டு வரவும் செய்தது.


இப்படி மாய்ந்து மாய்ந்து பெய்டு நியூஸ் தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு அதற்காக குரல் எழுப்புவதாகக் காட்டிக் கொண்ட தி ஹிந்து நாளிதழே பெய்டு நியூஸ் செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கை அல்ல கொடுமையின் உச்சம்.



                                   நரசிம்மன் ராம்.


அப்பொழுதைய மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்துள்ளார் என்று நாடு முழுவதும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை நியாயப்படுத்தும் வகையில் அவரது நேர்காணலை மே 22,2010 அன்று வெளியிட்டது. அவரது கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த நேர்காணல் வெளியிடப்படவில்லை. அதே நாளில் அனைத்துப் பதிப்புகளிலும் பல வண்ணத்தில் தொலை தொடர்புத்துறையின் விளம்பரத்தினையும் வெளியிட்டது.இதற்கான கட்டணம் பல லட்சங்கள்.
அப்பொழுது தி ஹிந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர்,அச்சிடுபவர்,மற்றும் பதிப்பாளராக இருந்தவர் நரசிம்மன் ராம்.


கல்யாணம்,கடைதிறப்பு நிகழ்ச்சிகளை ரூ. 200கவர் வாங்கி விட்டு செய்தி வெளியிடும் நிருபர்களை கவர் பார்ட்டி என்று சொல்லும் பொழுது பல லட்சங்களை வாங்கி விட்டு செய்தி வெளியிட்ட தி ஹிந்து ராம் ஐ என்ன சொல்லி அழைப்பது?இவர் பெய்டு நியூஸ் பற்றி கட்டுரை வெளியிட எதும் தகுதி உள்ளதா?அரசியலில் நேர்மை பற்றி எதும் தார்மீக உரிமை உள்ளதா? இவர் பத்திரிகை நடத்தவாவது எதும் தகுதி உள்ளதா?


நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

ஊடக நிறுவங்களில் இபபடி ஊழல் மலிந்து போனநிலையில்  இந்த ஊடக நிறுவங்களுக்கு அரசியல்வாதிகளின் ஊழலைப்பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று வாசகர்கள் தான் கூற வேண்டும்.



(நரசிம்மன் ராம் தி ஹிந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின் அவரது "சேவையைப்" பாராடும் வண்ணம் இப்பதிவு வெளியிடப்படுகிறது.)


Friday 20 January 2012

தி ஹிந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நரசிம்மன் ராம் விலகல்




நரசிம்மன் ராம் என்கிற ஹிந்து ராம் தி ஹிந்து,பிசினஸ் லைன்,பிரண்ட்லைன்,ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஆகியவற்றின் வெளியீட்டாளர்,அச்சிடுபவர்,முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து பல குடுமிப்பிடிகளுக்குப் பின் வேறு வழியின்றி வெளியேறியிருக்கிறார்.

அவருக்குப் பதிலாக சித்தார்த் வரதராஜன் தி ஹிந்து ஆசிரியராகவும் டி.சம்பத்குமார் பிசினஸ் லைன் ஆசிரியராகவும் ஆர்.விஜய்சங்கர் பிரண்ட்லைன் ஆசிரியராகவும்,நிர்மல் சேகர் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஆசிரியராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.  

கஸ்தூரி அய்யங்கார் குடும்பத்தைச் சாராத ஒருவர் இப்பொழுது முதன்மை ஆசிரியர் பொறுப்பேற்கிறார்.அதனால் மட்டும் தி ஹிந்து நாளிதழ் மாறி விடுமா என்ன? 

Sunday 8 January 2012

நக்கீரன் மீது தாக்குதல்-அடாது செய்தவன் படாது படுவான்!




                                                   அ.தி.மு.க.எதிர்வினை







பத்திரிகைகள் அறம் இழந்து,அரசியல் தரம் தாழ்ந்து காலம் பல ஓடி விட்டது.

இப்பொழுது நடுநிலை பத்திரிகைகள்,மக்களுக்கான அரசியல் என்பதெல்லாம் நாட்டில் துளியும் இல்லை.இப்பொழுது எல்லாம் வணிகமயமாகிவிட்டது.


தனது கையில் பத்திரிகை இருக்கிறது என்பதற்காக நக்கீரன்,கருணாநிதியின் கைப்பாவையாக மாறி முத்துவேலர் கருணாநிதியை அடிமட்ட திமுக தொண்டனைப் போல கலைஞர் என்று துதிபாடி விட்டு ஜெயலலிதாவை மாமி என்று விமர்சிக்கும் பொழுது அந்த விமர்சனத்தில் ஒரு பக்க சார்பும் பிழைப்புவாதமும் தான் இருக்கிறது.நேர்மை துளியும் இல்லை.

மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான், என்று எழுதுவதில் இருந்த "திராவிடத்'துடிப்பு, பட்டுவேட்டி கட்டிக்கொண்டு பெரியகோவிலுக்கு பின்வாசல் வழியே வந்த கருணாநிதியைப் பற்றி எழுதுவதில் எங்கே போனது?
முரசொலியின் வாரப் பதிப்புதான் நக்கீரன் என்பதை நிரூபிப்பதில் இத்தனை பட்டும் மாறவில்லை.


பிரபாகரனைப் பற்றிய ஜெகத் கஸ்பாரின் கட்டுக்கதைகளை நம்பி லாபம்பார்த்த நக்கீரன், இப்போது மற்றொரு வழியைத் தேடியிருக்கிறது என்பதற்கு மேலாக இதில் சொல்ல ஒன்றுமில்லை. 


அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு மனதில் தோன்றுவதையெல்லாம், போயஸ்கார்டனில் இருந்து பார்த்ததுபோல் எழுதி மக்களின் பணத்தை பிடுங்கும் நக்கீரனுக்கும், பேச்சுகொடுத்துக்கொண்டே பிளேடு போடும் திருடனுக்கும் என்ன வேறுபாடு என்பது தெரியவில்லை.

தனது பத்திரிகை விற்பனையைப் பெருக்குவதற்காகவும்,கருணாநிதியைத் துதிபாடுவதற்காகவும் எழுதுவது பத்திரிக்கை சுதந்திரம் இல்லை.


அரசியல்வாதிகளிடம் நடுநிலையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது.


அதுபோல் பத்திரிகைகளிடமும் நடுநிலையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக்கப்படுவதற்கு சமீபத்திய ஆதாரம்தான் நக்கீரன்.