Tuesday 14 August 2012

தினமணி-மெய்யாலுமா சார்..?



தினமணியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மெய்யாலுமா என்னும் பகுதி வருகிறது.அரசியல்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடைய திரைமறைவு செய்திகள் கிசுகிசுக்களாக இதில் பரிமாறப்படுகிறது.

மற்ற கிசுகிசுக்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதாக இது இருக்காது.



எழுதுபவர் இலக்கியப் புலமை,பழந்தமிழ் மன்னர்கள் பற்றிய ஞானம், மற்றும் ஆன்மீகத்தில்  ஈடுபாடு உடையவர் என்பதால் ஒவ்வொரு தகவலும்,மேற்கண்டவை தொடர்புடைய குறிப்புகளின் ஊடாகப் பரிமாறப்படும்.

இந்தப் பகுதிக்குச் செய்திகளை நாடு முழுவதுமிலிருந்து அளிப்பவர்கள் அதன் நிருபர்கள்.

அதனை கிசுகிசுவாக மாற்றி எழுதுபவர் அதன் ஆசிரியர் என்று சொல்கிறார்கள்.




அந்தப் பகுதியின் இணைப்பு இது.



நிறைய வாசகர்கள் கொண்ட பகுதி இது.நிற்க..

இனி மேலே சொன்னவற்றிற்கு தொடர்பற்ற நம் செய்திப் பதிவுக்கு வருவோம்.

நிமிர்ந்த நடையுடன் யார்க்கும் அஞ்சாத பார்வையுடன் தினசரி ஒலிக்கும் இதழைப் பற்றிய செய்தி இது.அதன் ஆசிரியராய்  சீர்காழி அருகே எழுந்தருளியிருக்கும் வைத்தீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் பெயர் கொண்டவர் இருக்கிறாராம்.இவர் நடுநிலை பிறழாதவரைப் போல் காட்டிக் கொள்வதில் வல்லவராம்.ஆனால் நிஜத்திலோ..?

எடுத்துக் காட்டாய் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறார்கள்.

அந்த நாளிதழில் வாரம்வாரம் அரசியல் புரணி பகுதி ஒன்று வெளிவருகிறதாம்.அதற்கு அதன் நிருபர்கள் கஷ்டப்பட்டு அனுப்பும் செய்தியை இவர் கொஞ்சம் உருமாற்றி எழுதுகிறாராம்.

இந்தப் பகுதிக்கு அலுவலகத்தில் வாரம் 10 ஆயிரம் ரூபாய் கணக்கெழுதி வாங்கப்படுகிறதாம்.ஆனால் அது செய்தி கொடுத்த சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு கொடுக்காமல் இடையில் வேறொருவருக்கு மடை மாற்றப்படுகிறதாம்.

சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு ”புளியோதரை” மட்டும் தான் கொடுக்கப்படுகிறதாம்.

ஊரெல்லாம் துப்பு துலக்கி அம்பலப்படுத்தும் பகுதியிலேயே ஊழலா என்று அங்குள்ளவர்கள் முனங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

மெய்யாலுமா..? 

எல்லாம் அந்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதனுக்கே வெளிச்சம்...!

1 comment:

Anonymous said...

its awesome!