Monday 9 April 2012

பிரியம்வதாவைப் பாராட்டுவோம்..!




                                                                   பிரியம்வதா

சென்னையில் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டு உலகத்திற்கே புலனாய்வு புடலங்காய் ஆய்வுகளை வாரி வழங்கி வரும் பத்திரிகையாளர்கள்(!) மத்தியில்,

பத்து கிலோ மீட்டர் தொலைவான இடத்திற்குக் கூட நேரில் சென்று செய்தி சேகரிக்காமல் செல்போனிலேயே செய்தி முழுவதையும் முடித்து விடும் ”அசகாய சூரர்கள்” உலவும் தமிழ்நாட்டு பத்திரிகை உலகில்(தமிழ்,ஆங்கிலம் இரண்டு பயபுள்ளைகளும் தான்)

சர்வதேச மனித உரிமையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே செல்ல அச்சப்படும் போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வடக்கு மாகாணத்திற்கு தன் உயிரைப் பணயம் வைத்து நேரில் சென்று உண்மையான புலனாய்வு செய்தியை ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சியின் I WITNESSED GENOCIDE: INSIDE  LANKA'S KILLING FIELDS நிகழ்ச்சி மூலம் வெளியுலகு அறியச் செய்தவர் அதன் முதன்மைச் செய்தியாளர் பிரியம்வதா.

இதற்காக 2012 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான செய்தித் தொலைக்காட்சி (சிறந்த புலனாய்வு செய்தி) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்தப் பணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்கள் எல்லாம் பாராட்டி அவருக்கு விழா எடுக்காட்டாலும் பரவாயில்லை..வாழ்த்தாவது சொல்லுங்கப்பா...

மின்னஞ்சல் முகவரி

priyamvatha.p@gmail.com



No comments: