Sunday 8 April 2012

கிருஷ்ணா டாவின்சிக்கு அஞ்சலி..!




குமுதம் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றிய கிருஷ்ணா டாவின்சி உடல் நலக்குறைவால் கடந்த 04-04-2012 வியாழன் அன்று மரணம் அடைந்தார்.

பொழுதுபோக்குப் பத்திரிகையான குமுதத்தில் சமூக அக்கறையுள்ள எத்தனையோ விஷயங்களைப் பதிவு செய்ய முடியும் என்று நிரூபித்தவர்..!

புதிதாகத் துறைக்கு வரும் இளம் பத்திரிகையாளர்களைத் தன்னலம் கருதாது ஊக்குவித்தவர்...!

அலுவலகத்தில் சக பத்திரிகையாளர்களுடன் வேறுபாடுகள் கருதாமல் இனிமையாகப் பழகியவர்...!

தனது அரசியல் நிலைப்பாடுகள் தவறானவை என்று தெரிந்தால் வெளிப்படையாக அதனை மாற்றிக் கொள்ளவும் தயங்காதவர்.

அவரது மறைவுக்கு கலகக்குரல் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது....

No comments: