Monday 31 October 2011

அண்டப்புளுகு அன்பழகன்









அன்பு என்கின்ற அன்பழகன் இவரது லீலைகளைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளோம். இவரை அண்டப்புளுகு அன்பழகன் என்றே சொல்லலாம்.இவரின் அண்டப்புளுகுக்கு இன்னொரு சமீபத்திய ஆதாரம்.


தமிழக முன்னாள் துணை முதல்வர்  மு.க.ஸ்டாலினைப் பற்றி இவர் சமீபத்தில் கைப்புள்ள ஸ்டாலின் என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.





இந்தப் புத்தக முகப்பில் உங்களுடன் என்ற தலைப்பில் தன்னைப் பற்றி ஒரு அண்டப்புளுகைப் புளுகியுள்ளார்.




 

தான் பூவாளுர் பொன்னம்பலனாரின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும்,பொன்னம்பலனார் தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர்,விடுதலை இதழின் முதல் ஆசிரியர் எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.(பொன்னம்பலனார் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.இவர் பொன்னம்பலனார் குடும்பத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை அப்புறம் பார்ப்போம்.)


விடுதலை இதழின் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் என்பது உண்மையான திராவிடப் பற்றாளர்களுக்கும் உண்மையைப் பேசுபவர்களுக்கும் நன்கு தெரியும்.






                               விடுதலை இதழின் முகப்பு
                                                     





உண்மை இவ்வாறு இருக்க இந்தப் புத்தகத்தின் தொடக்கத்திலேயே இவ்வாறு அண்டப்புளுகு புளுகியிருக்கும் அன்பு புத்தகத்தின் உள்ளே எவ்வாறு புளுகியிருப்பார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பொன்னம்பலனார் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் என்று அன்பழகன் முதல் பத்தியில் கூறியுள்ளார்.அடுத்த பத்தியில்  தியாகராய செட்டியாரின் மகன் வயிற்றுப்பேரன் நான் என்பதில் பெருமைப்படுவதாகச் சொல்லியிருக்கார்,இந்தத் தியாகராயச் செட்டியார் தன்னுடைய் வேலையை தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததாக கூறியிருக்கும் இவர் செய்யும் காரியங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.தியாகராய செட்டியார் பேரன் என்று இவர் சொல்வதைக் கேட்க நல்லவேளை தியாகராய செட்டியார் உயிருடன் இல்லை.

உண்மையில் இவர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவாரா என்பது இவர் செய்யும் செயல் சந்தேகத்தை எழுப்புகின்றது.இவர் நக்கீரனில் தனது பணியைத் தொடங்குவதற்கு முன்பே பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.சோ.அய்யர்.டாஸ்மாக் எம்.டி.யாக இருந்த பொழுது டாஸ்மாக் கடையில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியிருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு உதவிப் பேராசிரியர் பணி வாங்கிக் கொடுப்பதாகக் கூறி சில லட்சம் மோசடி செய்துள்ளார்.பணி வாங்கிக் கொடுக்காததால் பணம் கொடுத்த அந்த நபர்,அண்டப்புளுகு ஆசாமி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அமர்ந்திருந்த பொழுது தகராறு செய்துள்ளார்.இதனைக்கண்டு அண்டப்புளுகு காலில் விழுந்து  கால அவகாசம் கேட்டுள்ளார்.அப்பொழுது இவரின் இந்த எமாற்று வேலைகள் பத்திரிக்கையாளர் மன்றம் வரும் அனைவரின் முன்னிலையிலும் நாறிப்போனதாம்.அன்புவின் அல்லக்கையான ரஜினிகாந்த் என்பவர் அப்பொழுது மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளார்.மேலும் பணம் கொடுத்து ஏமாந்த மற்றும் சில நபர்களையும் பக்குவமாகப் பேசி மன்ற வளாகத்தை விட்டு வெளியேற்றினார்.இந்த்த் தகவல் கோட்டை பிரஸ் ரூம் வரை சென்று அனைவரும் பேசிக் கொண்டதைத் தொடர்ந்து சிறிது காலம் அண்டப்புளுகு கோட்டை பிரஸ் ரூம் பக்கம் போகாமல் இருந்தாராம்.

வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ஊரில் உள்ள அப்பாவிகளை ஏமாற்றும் இவருக்கும் தனது வேலையை விட்டுக் கொடுத்தவர் பேரன் என்று சொல்லிக்கொள்ள என்ன யோக்கியதை இருக்கிறது?

னால் இந்தப் புளுகன் சொல்லும் செய்திக்காக சில கழுகுகள் இவரை வட்டமிடுகிவதாகவும் சில வம்பானந்தாக்கள்,மாமி,மாமாக்கள், நாடோடிகள் அலெக்ஸ் பாண்டியனில் இருந்து அத்தனை பேரும் வாய்பிளந்து நிற்பதாகவும் சிலர் டீக்கடை பெஞ்சில காலை முதல் இரவு வரை காத்திருப்பதாகவும்,அவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து பக்கத்தை நிரப்புவதாகவும் இவரே சொல்லிக் கொண்டு திரிகிறார்.

மேலும் சில நேரங்களில் இவனுங்க வெட்டியா ஏசியில் உட்கார்ந்துக்கிட்டு 40 ஆயிரம்,50 ஆயிரம்,70 ஆயிரம் ன்னு சம்பளம் வாங்குறதுக்கு நாம வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படுறோம்,இவனுங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்கு கச்சேரி”(ரோஷமிருப்பவர்களுக்கு இது உறைக்கும்)என்று திட்டுகின்றாராம்.

இந்தப்புளுகன் கொடுக்கும் செய்தியை அப்படியே வாந்தி எடுத்துத் தான் மேற்கண்ட புலனாய்வு எலிகள் டெஸ்க்கில் அமர்ந்து கொண்டே வெளியிடுகிறார்கள்.இதைத்தான் நாமும் படித்து வருகிறோம்.

உண்மைச்சம்பவம் ஒரு சிலருக்குத் தான் தெரியும்.பொய் உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

1 comment:

rajamelaiyur said...

நல்ல பகிர்வு