Tuesday 25 October 2011

குமுதம் எச்.ஆர்.பிரியங்காவிடம் காவல்துறை விசாரணை.



பிரியங்கா.

மேட்டருக்குள் செல்லும் முன் பிரியங்காவின் வரலாறு சுருக்கமாக.

குமுதத்தில் வள்ளிநாயகம் என்று ஒரு எச்.ஆர்.இருந்தார்.அவர் மிகத் திறமைசாலி.ஆனால் அவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆஸ்திரேலியா சென்று விடவே அவர் வகித்த மிக உயரிய பதவிக்கு யாரைப்போடலாம் என்ற நிலை வந்த பொழுது பலரை பின் தள்ளி விட்டு எச்.ஆர்.பொறுப்பினை ஏற்றவர் தான் பிரியங்கா.

இவருக்கு கொழுத்த சம்பளம்.திறமையில்லாத இவர் குமுதத்தில் மிகப்பெரிய பதவிக்கு வந்ததை இவருடன் படித்தவர்கள்,இதற்கு முன் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்.அம்மணியின் திறமை மீது எல்லோருக்கும் அம்புட்டு நம்பிக்கை.இவர் குமுதத்தில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிக்கு வந்தது குறித்து பல அத்தியாயங்கள் எழுதலாம் தான்.

ஆனால் எழுத எங்களுக்கோ,படிக்க உங்களுக்கோ நேரமில்லை.ஒரே வரியில் சொல்லப் போனால் குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தவர்.

இவர் குமுதத்தில் உயரிய நிலையை அடைந்தவுடன் தன்னை இந்தநிலைக்கு உயர்த்திய எஜமானருக்காக எதையும் செய்யும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாய் மாறிப்போனார்.யாரையும் கேவலமாகப் பேசுவது,பணியாளர்களை அடிமையாய்க் கருதுவது என இயல்பே மாறிப்போனது.
இந்தநிலையில் தான் குமுதம் நிறுவனத்தில் பஞ்சாயத்து ஆனவுடன் இவரின் தலைக்கனம் அதிகமானது.தலைமை வடிவமைப்பு நிர்வாகி சாய்குமார் மீது குமுதம் அலுவலகத்தில் அனைவரும் அவரை சுற்றிநின்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மிரட்டிய பொழுது எச்.ஆர்.பிரியங்கா வும் சூழ்ந்து நின்று கொண்டு சாய்குமாரை மிகவும் கேவலாமக்வும் தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்.
அதன்பின்பு சாய்குமார் செக்ரட்டரியேட் காவல் நிலையத்தில் வரதராஜன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்த பொழுது பிரியங்காவின் பெயரும் இடம் பெற்றது.இதனை நாம் ஏற்கனவே கடந்த பதிவில் சொல்லியிருந்தோம்.

இனி தலைப்புக்கு வருவோம்.

இந்த நிலையில் கடந்த வாரம் மகளிர் காவல்துறையினர் பிரியங்காவை அழைத்து நீண்ட நேரம் விசாரித்துள்ளனர்.இந்த விசாரணைக்குப் பின் பிரியங்கா முகம் வெளிறிப் போயுள்ளாராம்.யாரிடமும் சரியாகப் பேசுவது கூட இல்லையாம்.பதட்டத்துடன் காணப்படுகிறாராம்.தன்னைக் காவல்துறை கைது செய்துவிடுமோ என பயந்து நடுங்குகிறாராம்.இதுக்கு தான் சொல்றது வந்த வேலையை மட்டும் பார்க்கணூம்னு.ம்ம்.பார்ப்போம்.என்ன நடக்குதுன்னு.

இதில் சுவராசியமான ஒரு செய்தி என்னவென்றால் பிரியங்காவை வழக்கமாக மாலையில் அலுவலக வாசலில் பிக் அப் பண்ண வரும் நண்பர் தன்னையும் எங்கே காவல்துறை விசாரிக்குமோ என்ற பயத்தில் கடந்த சில நாட்களாக பிக் அப் பண்ண வரவில்லையாம்.இதைக்கண்டு தான் அதிகம் வருத்தத்தில் இருக்கிறாராம் பிரியங்கா.

No comments: