புதிதாக சிலர் சேர்ந்து போலியாக கலகக்குரல் என்னும் பெயரில் ஒரு பிளாக் நடத்துகிறார்கள்.இவர்கள் எந்தப்பெயரில் வேண்டுமானாலும் பிளாக் நடத்தட்டும், நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.
கலகக்குரல் என்னும் பெயரில் பிளாக் நடத்துவது,நம் வடிவமைப்பு,குறிக்கோள்,புகைப்படம் என அனைத்தையும் அப்படியே ஈயடிச்சான் காப்பியாகப் பயன்படுத்தியிருப்பதும் நமக்கு மகிழ்ச்சியே.
பொதுவாக அப்பா,பையன் இரண்டு பேரும் தெருவில் ஒன்றாக நடந்து செல்லும் பொழுது, தந்தையைத் தெரிந்தவர்கள் அவரிடம் சொல்வார்கள்,அச்சடித்த மாதிரி பையன் உன்னை அப்படியே உரிச்சு வச்சுருக்கான்பா அப்படின்னு.
இப்படித்தான் இந்த ஆண்மையற்ற சில நபர்கள் தொடங்கியுள்ள கலகக்குரலுக்கு நாம் தான் அப்பனாக இருக்கிறோம் என்பதில் நமக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
பொய்யை உற்பத்தி செய்யும் போலிகள் போலியாக கலகக்குரல் ஒன்றை உற்பத்தி செய்து,ஏதோ ஒன்றை எழுதி வருகிறார்கள்.அவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதட்டும்,யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதட்டும்.அது அவர்களின் உரிமை.ஆனால் அதனை அவர்களுக்கான ஒரு பெயரில் எழுதட்டும்.நமது பெயரில் எழுதுவது மகாக் கேவலமாகவும் அருவறுப்பாகவும் இருக்கிறது.
இது அடுத்தவரின் தந்தையை தனது தந்தை என்று சொல்லிக் கொள்வது போல இருக்கிறது.இவர்கள் இனிமேல் மாறி விடுவார்கள் என நம்புவோம்.
இல்லையென்றால் அவர்களது பெயருக்கு முன் போட்டுக் கொண்டுள்ள இனிசியல் உண்மையில் அவர்களுக்கு உரியது தானா?இல்லை அதுவும் அடுத்தவருக்கு உரியதாக இருக்குமோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment