Tuesday 30 August 2011

எலும்புத் துண்டுக்கு விசுவாசம் காட்டும் இரட்டையர்கள்


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னும் அரசியல் வாரம் இருமுறை பத்திரிக்கையில் அன்புக்குப் பாத்திரமானவர் பணியாற்றிய பொழுது தனது புரோக்கர் தொழிலில் கோட்டையிலே கொடி கட்டிப் பறந்தார்.
இவரின் பிளாக் மெயில் மற்றும் புரோக்கர் தொழில் குறித்து அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பலரும் இவர் பணியாற்றும் பத்திரிக்கை நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.இந்தப் புகார் தொடர்பாக நிர்வாகம் ரகசியமாக புலனாய்வு மேற்கொண்டது.புகார்கள் உண்மை என்பது புலனாய்வில் தெரிய வந்ததால் இவர் பணியாற்றிய பத்திரிக்கையிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர் நீக்கப்பட்ட செய்தி அதே பத்திரிக்கையில் கட்டம் கட்டி வெளியிடப்பட்டது.இதன்பிறகு இவர் ஒய்வு பெற்ற முருகக் கடவுள் ஐஏஎஸ் பெயர் கொண்ட அதிகாரியைக் காக்கா பிடித்து சூரியக் குழுமத்திலிருந்து வெளிவரும் மாலை நாளிதழின் தலைமை நிருபர் என்ற பொறுப்பை வாங்கிக் கொண்டார்.இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது தன்னை மேனேஜ்மெண்ட் ஆள் என்று சக ஊழியர்களை மிரட்டி வந்தார்.
மாலை பத்திரிக்கையிலும்  கோட்டை செல்லும் பணி மட்டுமே தனக்கு வேண்டும் என்று கேட்டுப்பெற்றார்.ஆளும்கட்சி ஆதரவுப் பத்திரிக்கை என்னும் பந்தாவில் இவர் புரோக்கர் தொழிலும் மிரட்டலும் கொடிகட்டிப் பிறந்தது.அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப்போல் இந்த நிறுவனத்தில் சில காலமே கொடிகட்டிப் பறந்த இவரின் செயல்கள் நிர்வாகத்திற்குத் தெரியவர அல்பாயுசில் இவரின் வேலை பறிபோனது.
இவருக்குப் பரிந்துரை செய்த முருக்க் கடவுள் பெயர் கொண்டவரே  இவரின் வேலை பறிபோகக் காரணமாகி விட்டார்.காரணம் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பதைப் போல பரிந்துரை செய்த அதிகாரியிடமே இவர் மோசடி வேலையைக் காட்டி விட்டார்.


இதன் பிறகு இவரின் மோசடி வேலைக்கு எந்தப் பத்திரிக்கை நிறுவனமும் அகப்படாததால் சிறிது காலம் திருவண்ணாமலையில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையின் சென்னை பதிப்பு நிருபராக வேலை பார்த்தார்.அங்கும் இவரது மோசடி வேலைகள் தொடர்ந்தது.
ஏழுமலையான் பெயரைக் கொண்டவரும் ஜூனியரின் அண்டர்கிரவுண்டில் சீனியர் வேலை பார்த்ததால் தெருவில் நிறுத்தப்பட்டு நிர்வாகத்தால் துரத்தி அடிக்கப்பட்ட மோசடிப் பேர்வழியும் அங்கு பணியாற்றியதால் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.என்னும் முதுமொழியின் படி இரண்டு மோசடிப் பேர்வழிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் சென்னைப் பதிப்பே இழுத்து மூடப்பட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர்.


அதன்பின்பு இருவரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்து சென்றனர்.ஒருவர் புதிய தமிழகத்தைப் படைப்பதாகச் சொல்லி அரசியல் நடத்தும் கட்சியின் பத்திரிக்கையில் அன்பாக அடைக்கலம் புகுந்தார்.மற்றொருவர் அரசியல் பத்திரிக்கையில் ஆசிரியராக இருக்கும் தனது சிஷ்யனைக் குருவாக ஏற்று அங்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.


இந்த இரண்டு மோசடிப் பேர்வழிகளுக்கும் பொதுவாக ஒரு விஷேஷ குணம் உண்டு.அது,தாங்கள் எங்கு பணியாற்றினாலும் அந்த நிறுவனத்தின் எஜமானர்களிடம் அளவற்ற விசுவாசத்தைக் காட்டுவார்கள்.நிறுவனத்தை விட்டு .வெளியில் வந்த பிறகு அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களைப் பற்றியும்,எஜமானவர்களைப் பற்றியும் குற்றப்பட்டியலை வாசிப்பார்கள்.


அதன்படி அன்பானவர் தனது முன்னாள் எஜமானர்களை விமர்சித்து புத்தகம் வெளியிட்டார்.ஜூனியரில் பணியாற்றிய சீனியரோ தனது பழைய எஜமானரையும் அதில் பணியாற்றும் தனக்குப் பிடிக்காதவர்களைத் திட்டவும் ஒரு பிளாக் நடத்துகிறார். 

No comments: